India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு விவசாயியும், விவசாய <<19194432>>அடையாள எண்<<>> பெற்றிருப்பது அவசியம். இதற்கு, தேவையான நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை வேளாண் அலுவலகங்களில் கொண்டு சென்று விண்ணப்பிக்கலாம். இதன்பிறகே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தவணைத் தொகை ₹2,000 செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர், நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. 2024 நவம்பரில் USA சமரசம் செய்ததால் இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்பிறகு, இஸ்ரேலை ஹிஸ்புல்லா தாக்குவது இதுவே முதல் முறையாகும்.

தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக CM ஸ்டாலின் தொடர்ச்சியாக கூறும் நிலையில், அதை EPS மறுத்துள்ளார். மோடி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு மீது அவதூறு பிரசாரத்தை திமுக பரப்புவதாக சாடிய EPS, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்றும் விமர்சித்தார்.

இந்த கேள்வி உங்களுக்கு எழுந்தால், நல்லதுதான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், தோசையுடன் தானியங்கள், கறிவேப்பிலை, வெந்தயம், கீரை ஆகியவற்றை சேர்க்கவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், சட்னியில் புரோட்டின் நிறைந்த பாதாம், பிஸ்தாவையும் சேர்க்கலாம் என்கின்றனர். இது எடை அதிகரிக்க விரும்புவோருக்கு சிறந்த வழி எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள். நாளை உலக தோசை தினம். உங்களுக்கு பிடித்த தோசை வகை எது?

மதுரையில் பாஜகவுடன் <<19276123>>நேற்று நடத்திய<<>> தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் கசிந்துள்ளது. பேச்சின் முடிவை EPS ஏற்கவில்லை என கூறப்படும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவர் டெல்லிக்கு திடீர் விசிட் அடிக்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக, நேற்று பொதுக்கூட்ட மேடையிலேயே, அதிமுக ஆட்சி என்று EPS-ம், NDA ஆட்சி என்று PM மோடியும் முரணாக பேசியிருந்தனர்.

➤வைட்டமின் A அடங்கிய கீரைகள், மீன்கள், கேரட், நெல்லிக்காய், நட்ஸ் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள் ➤UV கதிர்கள் கண்களுடைய ஆரோக்கியத்தை பாதிக்கும். வெளியில் செல்லும்போது நல்ல சன்கிளாஸ் அணிந்து செல்லுங்கள். ➤நீண்ட நேரத்திற்கு மொபைல், கம்ப்யூட்டர், டிவி பார்க்க வேண்டாம். ➤போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள், உறங்குங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

தேர்தலையொட்டி 234 தொகுதிகளிலும் TVK செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்ற தொகுதிகளை தவிர பல தொகுதிகளில் ஆலோசனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. சில தொகுதிகளில் விஜய் பட பாடல்களை ஒலிக்கவிட்டு கட்சியினர் ஆடிக்கொண்டிருந்தனராம். கட்சி ரீதியாக 1,100 ஒன்றியங்கள், 5,200 கிளை கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்காததே இதற்கு காரணமாம்.
Sorry, no posts matched your criteria.