India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுக கூட்டணியிலுள்ள தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்க CM ஸ்டாலின் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், ராஜ்யசபா MP பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 6 + 1 சீட் கொடுக்க திமுக சம்மதித்ததாக கூறப்பட்டது. இது, இன்று ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ள விசிகவுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

சம்மர் சீசன் தொடங்குவதற்கு முன்பே, வெப்பநிலை அதிகரித்து நாம் இன்னலை சந்திக்கிறோம். இதனால் அதிகளவில் தண்ணீரை பருகும் படி டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகள், பறவைகள் நிலை என்ன? தண்ணீருக்காக அவை போராடுகின்றன. வீட்டு வாசலில் நீர் தொட்டிகளில் தண்ணீரையும், சில உணவு தானியங்களையும் பறவைகளுக்காக வையுங்கள். இது ஒரு அடிப்படை மனிதாபிமானம். SHARE IT.

மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் கூட்டம் என தவெகவும் ஒருபுறம் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்தும் தவெகவுடன் இதுவரை பெரிய அளவிலான கூட்டணி அமையவில்லை. இந்நிலையில், தவெக கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும், அது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த படிவத்தை <

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 80,285 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்து 24,854.50 புள்ளிகளில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

பாக்., ஆதரவுடன் பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்ட போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அமைதி காத்ததாக அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். போலீஸ் பாதுகாப்புடன் கமேனி கொலையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்ட அவர், சாதாரண மக்கள் போராடினாலே கைதுசெய்யப்படும் நிலை உள்ளது என்றார். மேலும், திமுக எப்போதும் அப்பீஸ்மெண்ட் பாலிடிக்ஸ் செய்வதாகவும் சாடியுள்ளார்.

ஈரான் – US போரால் தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று (மார்ச் 2) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹115 குறைந்து ₹15,660-க்கும், 1 சவரன் ₹920 குறைந்து ₹1,25,280-க்கும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரும் தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட வேண்டும், அதுவும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என தீர்க்கமாக இருக்கிறாராம் வைகோ. ஆனால் 6 சீட் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம், தனி சின்னம் என்றால் வெறும் 3 சீட் தான் கொடுக்க முடியும் என திமுக தலைமை நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. எனவே, திமுக இப்படி பிடி கொடுக்காமல் இருப்பதால் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

2026 தேர்தலுக்கு ஈரோடு கிழக்கில் விஜய் களமிறங்க வேண்டும் என கட்சி கூட்டத்தில் நிர்வாகிகள் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தவெகவில் கொள்கை தலைவராக உள்ள பெரியார் பிறந்த மண் என்பதாலும், விஜய்க்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் உருவானது இந்த இடத்தில்தான் என்பதாலும் விஜய்க்கு இத்தொகுதி மீது ஒரு சென்டிமென்ட் இருக்கிறதாம். எனவே, இதுகுறித்து அவர் ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 1 கிலோ ₹40 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை தற்போது மளமளவென குறைந்துள்ளது. கரூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹10 – ₹12 வரை விற்கப்படுகிறது. இதனால் சில்லறை கடைகளில் 1 கிலோ தக்காளி ₹12 – ₹15 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வரத்து அதிகரிப்பே காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.