India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறாததால் பாக்., மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதால், ஒவ்வொரு வீரருக்கும் தலா ₹16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் முடித்தாலும் நெட் ரன்ரேட் காரணமாக பாக்., அரையிறுதிக்கு செல்லவில்லை.

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பாக SM-ல் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தவெகவின் CTR நிர்மல்குமாரிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 2-ம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்., இறுதியிலேயே TN-ல் தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, சின்னம்மை பாதிப்பு இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

விஜய் – சங்கீதா விவகாரம் ஹாட் டாபிக்காக உள்ள நிலையில், தற்போது சினிமா நட்சத்திரங்கள் சிலர் அது குறித்து கருத்து கூற தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து நடிகர் ஆரியிடம் கேட்டபோது, விஜய் மட்டுமின்றி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்தார். SM வளர்ச்சி தனிமனித விமர்சனத்தை அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக, தவெகவின் கூட்டணி கதவுகள் திறக்காததால் வேறுவழியின்றி NDA பக்கமே திரும்பியுள்ளாராம் ராமதாஸ். ஆனால், ராமதாஸை கூட்டணியில் சேர்க்க, அதிரடியாக 3 கண்டிஷன்ஸ் போட்டுள்ளாராம் அன்புமணி. அதன்படி, *ராமதாஸ் அணிக்கு மாம்பழம் சின்னத்தை கொடுக்க மாட்டோம் *முதலில் என்னுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய வேண்டும். *ராமதாஸ் இருக்கும் மேடையில் நான் ஏறமாட்டேன் என்பதே அந்த 3 கண்டிஷன்களாம்.

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (மார்ச் 3) நிகழ உள்ளது. இது பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. இந்தியாவில் மாலை 6.22 மணி முதல் 6.47 மணி வரை பார்க்க முடியும். சந்திர கிரகணம் காரணமாக, காசி, திருப்பதி, தர்மஸ்தலா, தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் என நாட்டின் முக்கியமான கோயில்களில் நாளை குறிப்பிட்ட நேரத்தில் நடை சாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இது எந்த மாதத்தில் இருந்து வரவு வைக்கப்படும் என எதிர்பார்த்து மகளிர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்த பின் ஜூனில் அதற்கான அறிவிப்பை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாம். தொடர்ந்து, திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. மற்றொரு புறம் <<19279246>>ராகுல் காந்தி<<>> தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைக் கூட தாண்ட முடியாது என தவெக நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சியில் அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்குச் சான்றாகும் என சாடியுள்ள தவெக, குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும் மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.