India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் வரும் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2020-ல் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைதான நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வர உள்ளது.

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால், திமுக கூட்டணியில் இருந்து விலக காங்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் 35 தொகுதிகளை காங்., கேட்கும் நிலையில், 25 தொகுதிகளையே வழங்க திமுக முன்வந்துள்ளதாம். இதனிடையே, ஹைதராபாத்தில் <<19279246>>ராகுலுடன் ஆதவ் அர்ஜூனா<<>> பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தமிழக தேர்தல் களத்தில் கடைசி நேர திருப்பமாக அமைந்துள்ளது.

மக்களே, பொடுகு தொல்லை இருந்தால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். இதை எண்ணி இனி கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்னையை தீர்க்க, எலுமிச்சையும் தேனும் போதும். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையுமாம். Try பண்ணி பாருங்க. அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

விவாகரத்து சர்ச்சைக்கு பின் சங்கீதா பற்றி கேலிச் சித்திரங்களுடன் ஆபாசமாக விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாக ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) கண்டனம் தெரிவித்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை எனவும் இத்தகைய செயல்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகை ரோஹினி இந்த அறிக்கையை பகிர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

குவைத்தில் <<19278486>>US-ன் F-15 போர் விமானங்களை <<>> ஈரான் சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், ஈரானின் போர் விமானங்கள் என நினைத்து குவைத்தான் 3 US F-15-ஐ சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க தரப்பில் சொல்லப்படுகிறது. போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அதில் இருந்த 6 விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் உயர் தப்பினார்.

சந்திர சூடேஸ்வரர் கோயில் விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் நாளை (மார்ச் 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நாளை மறுநாள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT.

+12 மாணவர்களுக்கு இன்றுமுதல் பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளில் சுமார் 10,000 பேர் மொழித்தேர்வை எழுதவில்லை. பள்ளி மாணவர்கள் 8,319 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 1,600 பேர் இன்றைய தேர்வை தவறவிட்டதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வில் எந்த மாணவர்களும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களே தேர்வு எப்படி எழுதியிருக்கீங்க?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, <<19280134>>சந்திர கிரகணத்தின்போது<<>> வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கக் கூடாது. கோவிலுக்கு செல்லக் கூடாது. கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது. மேலும், கிரகணம் முடிந்த பிறகு சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டுமாம். அதன்படி, வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். மேலும், கோயிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். SHARE IT.

இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் IRGC படை தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த நேரத்தில் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா, அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் இஸ்ரேலிய விமானப்படை தளபதியின் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

<<19278785>>கார் விபத்தில் <<>>தனது டிரைவர் முத்து உயிரிழந்தது தொடர்பாக நடிகை தேவிப் பிரியா உருக்கமாக பேசியுள்ளார். முத்து தனக்கு அம்மா மற்றும் தம்பி போன்று இருந்ததாகவும் 15 ஆண்டுகளாக தன்னை கவனித்து வந்ததாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார். ஷூட்டிங்கிற்காக தேனிக்கு சென்று கொண்டிருந்தபோது கார் டயர் பஞ்சரானதாக கூறிய அவர், அப்போது நிறுத்தி வைத்த தனது கார் மீது மற்றொரு கார் மோதியதாக தேவிப் பிரியா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.