India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பானது இன்று முதலே அமலுக்கு வந்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தவும், தேவைக்கேற்ப அரிசி இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாள்களில் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளது.
MI அணியின் இளம் வீரர் விக்னேஷ் புதூர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகியதை அடுத்து, அவருக்கு பதில் ரகு சர்மாவை தேர்வு செய்துள்ளதாக MI நிர்வாகம் அறிவித்துள்ளது. CSK அணிக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து விக்னேஷ் கவனத்தை ஈர்த்தார். MI அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். MI இன்றிரவு RR அணியுடன் மோதுகிறது.
இந்தியாவில் கடந்த 4 நாள்களில் தங்கத்தைவிட அதிக விலை உயர்வை கண்டிருக்கிறது குங்குமப்பூ. பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்திய – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் வாகா எல்லை மூடப்பட்டது. இதனால், ஆப்கானில் இருந்து குங்குமப்பூ இறக்குமதி செய்வது தடைபட்டது. தற்போது, 1 கிலோ குங்குமப்பூவின் விலை 10% வரை அதிகரித்து ₹5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது 50 கிராம் தங்கத்திற்கு சமமாம்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நரேந்திர சலுஜா (58) மாரடைப்பால் காலமானார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். சேஹோரில் திருமண விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஜகவில் சேருவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
அம்பானி வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ‘ஹேப்பி’ என்ற கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் திடீரென மரணமடைந்துள்ளது. நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி குடும்ப திருமணத்திலும், ஜாலியாக வலம் வந்து பலரையும் கவர்ந்திருந்தது ஹேப்பி. ஹேப்பியின் மறைவால் அம்பானியின் குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது. நீ என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பாய் என அம்பானி பேமிலி இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
பாக்., உடன் இணக்கமாக செல்லும்படி இந்தியாவுக்கு USA அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதல் குறித்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், USA வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோவுடன் பேசினார். பயங்கரவாதிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். அதற்கு, இந்தியா-பாக்., இணைந்து செயல்பட வேண்டும், நிலைமையை மோசமாக்க வேண்டாம் என மார்கோ ரூபியோ கோரிக்கை வைத்தார்.
RRB-யில் இருக்கும் 9970 உதவி லோகோ பைலட் பணிகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம். 10 வது தேர்ச்சி பெற்று, 18 – 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். உடல்தகுதி மற்றும் கணினி வழி தேர்வு நடைபெறும். குறைந்தபட்ச சம்பளமாக, இதர சலுகைகளுடன் 19,900 – ₹37,966 வரை வழங்கப்படும். இதற்கு வரும் மே 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் மாநிலத் தலைவரை மாற்றும் முடிவில் இருக்கிறதாம் பாஜக. NR காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் முட்டல்கள் அதிகரித்திருப்பதால், தலைவரை மாற்றி ரங்கசாமியை ’கூல்’ செய்யலாம் என டெல்லி கணக்குப் போட்டுள்ளது. ஆனால், யாரை மாற்றினாலும் விஜய் உடன் தான் ரங்கசாமி கூட்டணி வைப்பார் என தகவல்கள் வருகின்றன. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையை புஸ்ஸி ஆனந்த் ஏற்கெனவே தொடங்கிவிட்டாராம்.
பிரபல கன்னட நடிகர் ‘கோத்தி’ மஞ்சா என்கிற உமேஷ் நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த ‘ஜோகி’ படத்தில் உமேஷின் கேரக்டரின் பெயர் தான் கோத்தி மஞ்சா. தொடர்ந்து எண்ணற்ற கன்னட படங்களில் நடித்துள்ள இவரின் மறைவிற்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP
பாமகவை NDA கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அண்மையில், டெல்லியில் பாமகவினர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியபோது கூட கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அன்புமணியின் ராஜ்யசபா MP பதவி அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்து மீண்டும் அவருக்கு MP பதவியை வழங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.