India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சுப்மன் கில், ஆஸி.,க்கு எதிரான தொடரில் தோல்வியுற்றார். கில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜிம்பாப்வேக்கு (2013) எதிரான ODI தொடரை 5-0 என கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. இதில் 197 ரன்களையும் கோலி குவித்தார். இலங்கைக்கு (2017) எதிரான ODI தொடரை 2-1 என வெற்றி பெற்ற ரோஹித்தின் நீலப்படை வென்றது. ரோஹித் மட்டும் 217 ரன்களை குவித்தார். ஆஸி.,க்கு (2007) எதிரான தொடரில் தோல்வியுற்றது தோனியின் கேப்டன்சி.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து வந்து விஜய் பார்த்திருப்பது, அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையாக உள்ளது என திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் இடங்களுக்கு சென்று சந்தித்து, ஆறுதல் சொல்வதைத்தான் இவ்வளவு காலமாக நாம் பார்த்திருக்கிறோம், அதைத்தான் அரசியல் தலைவர்களும் பின்பற்றி வருகின்றனர் என்றும் திருமா குறிப்பிட்டார்.

நான் எப்போதும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை, இந்தியாவை பயமற்ற அணியாகவே உருவாக்க விரும்புகிறேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். ஹெட் கோச் கம்பீர் வழிகாட்டுதலில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, ஆஸி., உடனான ODI தொடரை இழந்தது. ஆஸி.,க்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் ஆட்டத்தின் மீது முழுக் கவனத்தையும் செலுத்துவோம் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

SIR பணிகளை தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜக மேற்கொள்ளும் வாக்குத் திருட்டு என்று தமிழகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் எதிர்க்கின்றனர் என விசிக MP ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பாஜகவை தனது கொள்கை எதிரி என கூறும் தவெகவும் இதனை எதிர்க்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் வாய் திறப்பாரா என்றும் கேட்டுள்ளார். கரூர் துயருக்கு பிறகு சமூக பிரச்னைகளுக்கு தவெக குரல் கொடுக்கவில்லை.

வெந்நீரில் குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை தருகிறது. மழைக்காலத்தில் பெரும்பாலும் அனைவரும், வெந்நீரில் குளிப்பது வழக்கம். அந்த வகையில், வெந்நீரில் குளிப்பதால், என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படும் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9, மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், சிலர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மீண்டும் ஒரு திருநங்கை போட்டியாளர் நுழையவுள்ளதாக கூறப்படுகிறது. ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருந்த திருநங்கை ஜீவா போட்டியாளராக களமிறங்குகிறாராம்.

*நாளை மும்பைக்கு செல்கிறார் PM மோடி.
*மொன்தா புயல்: பாஜகவினர் களத்தில் பணியாற்ற JP நட்டா அறிவுறுத்தல்.
*டெல்லி ஆசிட் வீச்சு: பெண்ணின் தந்தை கைது.
*பஞ்சாப்பில் ஒரே நாளில் 147 தீ விபத்துகள் பதிவு.
*மொன்தா புயல் எதிரொலி: ஆந்திர பயணிகளுக்கு இண்டிகோ அலர்ட்.
*சத் பூஜையின் போது கங்கையில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு.

காயம் காரணமாக, பிரதிகா ராவல் மகளிர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, 2023 ODI ஆடவர் உலகக் கோப்பையின் போதும், வின்னிங் வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக வெளியேறினார். 2019 உலகக் கோப்பையிலும் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகிய நிலையில், அரையிறுதியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. வீரர்களின் இந்த விலகல்கள், ரசிகர்களின் மனதை பெரும் காயங்களாக மாறியுள்ளது.

*1492 – கொலம்பஸ், கியூபாவை கண்டுபிடித்தார்.
*1627 – முகலாய பேரரசர் ஜஹாங்கீர் நினைவுநாள்.
*1922 – முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
*1955 – Microsoft நிறுவனர் பில் கேட்ஸ் பிறந்தநாள்.
*1988 – நடிகை வாணி போஜன் பிறந்தநாள்.

தமிழகத்தில் SIR அவசியமான ஒன்று என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்திலேயே ஸ்டாலின் இதை எதிர்ப்பதாக விமர்சித்த அவர், முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையால், திமுகவின் முறைகேடுகள் அம்பலமாகும் எனவும் முருகன் தெரிவித்துள்ளார். நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.