India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசின் அடையாள அட்டைகளான ஆதார், பான், ரேஷன் ஆகியவை குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டில் தங்கிய பலரும் இந்த அட்டைகளை வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்றுகளை குடியுரிமைக்கான சான்றாக சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் முறையாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருட்டுக்கடை அல்வா உலக ஃபேமஸ்; ஆனால் அதைவிட ஃபேமஸாகிக் கொண்டிருக்கிறது கடைக்காக தொடரும் வாரிசு சண்டை. கிருஷ்ண சிங்கின் மகள் கவிதா சிங் என்பவர் கடையை நடத்திவரும் நிலையில், அவரது சகோதரர் நயன் சிங்கும் உரிமைகோரினார். இப்போது, கிருஷ்ண சிங்கின் சகோதரர் பேரன் பிரேன் சிங் நான்தான் ஓனர் என்றும் கவிதாவும் நயனும் ஊழியர்கள் என்று புதிய ட்விஸ்ட் வைத்துள்ளார். இன்னும் எத்தனை பேர் கிளம்பி வரப்போறாங்களோ..
லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹஃபிஸ் சயீத்தின் பாதுகாப்பை பாக்., அரசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு அஞ்சி, வீட்டுச் சிறையில் இருக்கும் ஹஃபிஸ் சயீத்திற்கு சிறப்புக் குழுவை சேர்ந்த முன்னாள் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனராம். மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்தான் இந்த ஹஃபிஸ் சயீத்.
அடிதடியில் இருந்து ஒதுங்க நினைக்கும் கேங்ஸ்டரும், அவன் காதலியும், அவனை துரத்தும் பழைய ரவுடியையும் சுற்றி நடக்கும் கதையே ரெட்ரோ. ப்ளஸ்: சூர்யா மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். முதல் பாதி. சந்தோஷ் நாராயணின் இசையும் மற்றும் ஒளிப்பதிவும் படு கிளாஸாக இருக்கு. கார்த்திக் சுப்பாராஜ் ஆங்காங்கே ஜொலிக்கிறார். பல்ப்ஸ்: 2-ம் பாதியில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். Rating: 2.25/5.
தொடர்ந்து 5 பாட்டில் மதுவை குடித்தால், ₹10,000 கொடுக்கிறோம் என நண்பர்களுக்குள் கட்டிய பந்தயத்தால், ஒரு உயிர் பறிபோயுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த கார்த்திக் (21), மது அருந்திய உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 8 நாள்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் விஜய் ரோடு ஷோ நடத்த சிக்கல் எழுந்துள்ளது. படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்லும் அவர், இன்று மாலை மதுரைக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து 5 கி.மீ. ரோடு ஷோ நடத்திவிட்டு அப்படியே படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளார். ஆனால், ரோடு ஷோ நடத்த அனுமதி பெறவில்லை என்றும், தடையை மீறி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுரை காவல் ஆணையர் லோகநாதன் எச்சரித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான ‘கயல்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் உள்ளார். விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் திருமணமான ஒரு பெண்ணுடன் நாசர் அலி (30) என்பவர் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் 5 வயது மகனை நாசர் அலியும், அவரது நண்பர் வேலுமணியும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
உக்ரைன் கனிமங்களில் இருந்து கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் USA, உக்ரைன் கையெழுத்திட்டுள்ளன. ரஷ்யா உடனான போரால் உக்ரைனின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் முக்கியமானதாக பார்க்கிறார். உக்ரைன் வளர்ச்சிக்காக அந்நாட்டுடன் சேர்ந்து USA நிதி முதலீடு செய்யும். USA-வின் ராணுவ உதவிகளை பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் அவசியம் என உக்ரைன் கருதுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அன்புமணி கூறியுள்ளார். இதில், உரிமை கொண்டாட திமுக, காங்கிரஸ் கட்சிக்குத் துளியளவு கூட தகுதி இல்லை என காட்டமாக கூறினார். மேலும், மத்திய அரசின் கணக்கெடுப்பு நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால் 69% இட ஒதுக்கீட்டை காக்கவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீட்டை அளிக்கவும் மாநில அரசு உடனடியாக சர்வே நடந்த வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.