News October 16, 2025
நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: IMD

வரும் 24-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என RMC தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும் இன்றும், நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளார். நாளை விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
Similar News
News October 17, 2025
Bussiness Roundup: தங்கம், வெள்ளி இறக்குமதி விலை உயர்வு

*இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 2-வது நாளாக ஏற்றத்தில் வர்த்தகமாகின. *இந்திய பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பால், USA-வுக்கான ஏற்றுமதி 12% குறைந்தது. *ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2030-க்குள் இந்தியாவில் ₹45,000 கோடி முதலீடு. *தங்கம், வெள்ளி, சமையல் எண்ணெய் ரகங்களுக்கான இறக்குமதி விலையை மத்திய அரசு உயர்த்தியது. *நாட்டில் UPI மூலம் 85% பரிவர்த்தனை நடப்பதாக RBI கவர்னர் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
National Roundup: பெங்களூரில் தமிழ் மாணவி கொலை

*பிஹார் தேர்தலில் 48 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. *குளிர் காலத்தில் ஜம்முவும், கோடை காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும் என அம்மாநில CM உமர் அப்துல்லா அறிவிப்பு. *பெங்களூருவில் காதல் விவகாரத்தில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை. *சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா – கர்நாடகா இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
News October 17, 2025
அக்டோபர் 17: வரலாற்றில் இன்று

*உலக வறுமை ஒழிப்பு நாள். *1892 – சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்தநாள். *1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாஜி ஜெர்மனியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். *1970 – அனில் கும்ப்ளே பிறந்தநாள். *1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. *1981 – கவிஞர் கண்ணதாசன் இறந்தநாள். *1992 – நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.