News March 28, 2024
4% நிறுவனங்கள் மட்டுமே இதை சமாளிக்க முடியும்

இந்தியாவில் சைபர் அச்சுறுத்தல்களை சமாளிக்க 5%க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டும் தயாராக இருப்பதாக சிஸ்கோ நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. சுமார் 1,000 தனியார் நிறுவன தலைவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் உள்ள 59% நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பை உருவாக்கும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உலகளவில் 3% நிறுவனங்கள் மட்டுமே சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.
Similar News
News February 2, 2026
உங்களிடம் தங்கப் பத்திரம் இருக்கா? இது உங்களுக்கு தான்

பட்ஜெட்டில் தங்கப் பத்திரங்களுக்கான வரி விலக்கு விதிகளில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. RBI-யிடம் நேரடியாக வாங்கும் தங்கப் பத்திரங்களை முதிர்வு காலம் வரை வைத்திருந்தால் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும். மாறாக பங்குச் சந்தையில் வாங்கி முதிர்வு காலம் வரை வைத்திருந்தாலோ, முதிர்வு காலத்திற்கு முன் விற்றாலோ நீங்கள் பெறும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். வட்டி விகிதத்தில் (2.5%) மாற்றமில்லை.
News February 2, 2026
புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, மாதம் ₹2,500 வழங்கப்படும் என CM ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அரசின் எந்தவித உதவியும் பெறாத 70,000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் நிலையில், தொகையை உயர்த்தி விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News February 2, 2026
தனுஷ் படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘D55’ படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளன. 2 நாள்களுக்கு முன், தனுஷ் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், இன்று சாய் பல்லவியும் நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர், 2 முன்னணி நடிகைகள் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


