News October 1, 2025
அக்டோபர் 1: வரலாற்றில் இன்று

*அனைத்துலக முதியோர் நாள்.
*உலக சைவ உணவு நாள்.
*1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
*1847 – அன்னி பெசன்ட் பிறந்தநாள்.
*1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
*1927 – நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்.
*1953 – சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.
*2006 – ‘பாண்டிச்சேரி’ பெயர் ‘புதுச்சேரி’ என மாற்றப்பட்டது.
Similar News
News October 1, 2025
அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

2023-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 1,77,335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022-ஐ காட்டிலும் 9.2% அதிகம் என NCRB அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, ஒரு லட்சம் குழந்தைகளில் 39.9 பேர் குற்றங்களுக்கு உள்ளாவதாக அறிக்கை கூறுகிறது. 2021-ல் 1,49,404 குற்ற வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2022-ல் 1,62,449 ஆக உயர்ந்திருந்தது.
News October 1, 2025
படிப்புக்கும் நடிப்புக்கும் தொடர்பில்லை: அனுபமா

தான் படித்த பள்ளியில் படிப்பில் முதலிடம் பிடிப்பவர்களுக்கே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார். ஆனால், தான் டாப்பர் இல்லை என்பதால், அப்போது நடிப்பை தள்ளிவைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் வளர்ந்த பிறகுதான் படிப்புக்கும் நடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிய வந்ததாக தனது அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் அனுபமா பகிர்ந்துள்ளார்.
News October 1, 2025
சரஸ்வதி பூஜையில் இப்படி வழிபாடு பண்ணுங்க!

ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் வைத்து அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். புத்தகங்களை மேஜையின் மேல் அடுக்கி வைக்கவும். படத்தின் முன் ஒரு இலை விரித்து, அதில் வெற்றிலை பாக்கு, பழம், பொரி ஆகியவற்றைப் படைத்து, நெய் தீப வழிபாடு செய்ய வேண்டும். மறுநாள் காலையில் புதிதாக இலை போட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜையை நிறைவு செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும். SHARE.