News October 15, 2024

அக்.15: வரலாற்றில் இன்று

image

1542: முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்தார்.
1815: நெப்போலியன் போனாபார்ட் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டார்.
1918: சீரடி சாய்பாபா மறைந்தார்.
1931: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தார்.
1935: டாடா நிறுவனம் முதல் விமான சேவையை தொடங்கியது.
சர்வதேச மாணவர்கள் தினம்
சர்வதேச கை தூய்மை தினம்

Similar News

News August 24, 2025

நியாயம், அநியாயம் என்று எதுவும் இல்லை: ஸ்ருதிஹாசன்

image

‘ஏன்மா வம்ப விலை கொடுத்து வாங்குற, உனக்கே இது நியாயமா இல்லையா?’ என ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஸ்ருதிஹாசனிடம் கேட்டுள்ளனர். இதற்கு இன்ஸ்டாகிராமில் கூலாக பதிலளித்துள்ள அவர், ப்ரீத்தி ரோல் துயரத்தில் உள்ளது. எனவே இதில் நியாயம், அநியாயம் என்றும் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இப்படத்தில் தானாக ஒரு சிக்கலை தேடிச் செல்வது போன்று ஸ்ருதியின் ரோல் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்க என்ன நினைச்சீங்க?

News August 24, 2025

சற்றுமுன்: மாதம் ₹2000 பெற விண்ணப்பிக்கலாம்

image

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2000 உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோரை இழந்து, உறவினர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு ( ஆண், பெண்), ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதந்தோறும் ₹2000 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற விரும்புவோர், தகுதியான ஆவணங்களுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.

News August 24, 2025

வாக்குத் திருட்டு.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

image

எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்றால் ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம் என கேரள BJP துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக, வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் லோக் சபா தேர்தலில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அவர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!