News March 20, 2024
கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த வழக்கு குறித்து பதிலளிக்கக்கோரி, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை 9 சம்மன்கள் அனுப்பியதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ED-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்.22க்கு ஒத்திவைத்தது.
Similar News
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: வெளியான பரபரப்பு தகவல்கள்

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதிகளின் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முதலில் குடியரசு தினம் மற்றும் தீபாவளி அன்று மிகப்பெரிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கைதான உமர் நபி மற்றும் உமர் முகமது ஆகியோர் செங்கோட்டையில் பலமுறை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக NIA கைதான 9 பேரிடம் விசாரணை நடத்திவருகிறது.
News November 12, 2025
டெல்லியில் காற்று மாசு அவசர நிலை

டெல்லியில் காற்று தரக்குறியீடு 428 ஆக உயர்ந்து, இந்த ஆண்டின் மிக மோசமான மாசு நிலையை எட்டியுள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவு அதிக மாசு ஆகும். இதனால், டெல்லி முழுவதும் GRAP-3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. *கட்டுமான, இடிப்பு பணிகளுக்கு தடை *BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் 4 சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு *5-ம் வகுப்பு வரை பள்ளிகளில் Hybrid முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவு.
News November 12, 2025
தோல்வியில் இருந்து தப்பிய பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவும், பொது வீரராக பங்கேற்ற டேனியல் துபோவும் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 14-வது நகர்வின் போது ராணி முன்னால் இருந்த சிப்பாயை பிரக்ஞானந்தா கவனக்குறைவாக நகர்த்தினார். இதன்மூலம் டேனியல் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவசரத்தில் அதை கவனிக்க தவறிவிட்டார். பின்னர் 41-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.


