News November 18, 2024

தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை: ஷோபா

image

திருச்சிக்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே இன்று வருகை தந்தார். அப்போது, தான் தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை என்றார். பாகிஸ்தானியர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற்று குண்டு வைத்ததாகவே தான் கூறியதாகவும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் மன்னிப்பு கேட்டதாகவும் ஷோபா விளக்கம் அளித்தார். பெங்களூர் குண்டுவெடிப்புக்கு தமிழத்தில் இருந்து வந்தவர்களே காரணம் என ஷோபா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 18, 2026

ஸ்டாலினிடம் நேரடியாக டீலிங் செய்யும் திருமா

image

தொகுதிப்பங்கீட்டு விவகாரத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், திமுக தொகுதிப்பங்கீட்டு குழுவோ, அக்கட்சிகள் கேட்கும் தொகுதிகளை தர மறுக்கின்றன. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கும் திருமாவளவன், இனி திமுக குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை; ஸ்டாலினிடம் மட்டுமே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 18, 2026

ஸ்டாலினுடன் தொடர்வது ஏன்? வைகோ புதிய விளக்கம்

image

வேண்டா வெறுப்பாக திமுகவுடன் மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்வதாக EPS விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதியின் இறுதிக் காலத்தில் அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் உள்ளேன் என்றார். அதை நிறைவேற்றும் வகையில் மதிமுக செயல்படுவதாகவும், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெல்வது உறுதி என்றும் கூறினார்.

News March 18, 2026

அமெரிக்காவில் RSS மீது தடையா? இந்தியா மறுப்பு!

image

RSS மற்றும் RAW மீது தடைவிதிக்க வேண்டுமென US-ன் சர்வதேச மத சுதந்திர <<19396338>>ஆணையத்தின் பரிந்துரையை<<>> மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. இந்த பரிந்துரை உள்நோக்கம் & பாரபட்சமானது என கூறியுள்ளது. இது இந்திய இறையாண்மையை தவறாக சித்தரிக்கும் முயற்சி என்றும், இந்தியா மீது பழிபோடுவதை விடுத்து, US-ல் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் & வெறுப்பு சூழல் ஆகிய பிரச்னைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!