News November 18, 2024
தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை: ஷோபா

திருச்சிக்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே இன்று வருகை தந்தார். அப்போது, தான் தமிழர்களை தீவிரவாதிகள் எனக் கூறவில்லை என்றார். பாகிஸ்தானியர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற்று குண்டு வைத்ததாகவே தான் கூறியதாகவும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் மன்னிப்பு கேட்டதாகவும் ஷோபா விளக்கம் அளித்தார். பெங்களூர் குண்டுவெடிப்புக்கு தமிழத்தில் இருந்து வந்தவர்களே காரணம் என ஷோபா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 10, 2025
சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.
News December 10, 2025
வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
News December 10, 2025
சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு!

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, கடைசி 3 மாதங்களில் காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் high BP ஏற்படும் ஆபத்து அதிகமாம்.


