News October 1, 2025
விடுமுறை கிடையாது.. அரசு புதிய அறிவிப்பு

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும் வரும் அக்.3-ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்ததாக நேற்று தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையல்ல என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு (TN FACT CHECK) அறிவித்துள்ளது. இதனால் 5 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், ஊருக்கு சென்றுவரலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே. எனினும், அக்.3 விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News October 1, 2025
திமுக விழாவில் பங்கேற்றவர் கரூர் துயரத்தில் மரணம்

கரூர் துயர நிகழ்வை அரசியலாக பார்க்க விரும்பவில்லை என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் துயரத்தில் திமுக முப்பெரும் விழாவில் கலந்துக் கொண்ட தம்பியும் உயிரிழந்துள்ளார் எனக் கூறிய அவர், யார் மீது தவறு என பேசாமல், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார். மேலும், சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் கூட்டம் அதிகளவில் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
News October 1, 2025
கரூர் துயரம்: செந்தில் பாலாஜி விளக்கம்

கரூர் கூட்ட நெரிசலுக்கு செந்தில் பாலாஜி காரணம் என்று தவெக குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் துயரமானது; நினைத்துக்கூட பார்க்க முடியாதது. யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. இனி வரக்கூடிய நாள்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
News October 1, 2025
RBI-யிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா?

தங்கம் விலை ₹87 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், RBI-யிடம் மட்டும் சுமார் ₹4.32 லட்சம் கோடி மதிப்பில் 880 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் GDP வளர்ச்சி 6.8%ஆக அதிகரிக்கும்; சில்லறை விலை பணவீக்கம் 2.6%ஆக குறையும் எனக் கூறிய அவர், அமெரிக்காவின் வரி தொடர்பான முடிவுகள் வளர்ச்சியை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.