News September 1, 2025

அனைத்து வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை

image

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் தேர்தல் ஆணையத்தை வைத்து, BJP வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்., திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பிஹாரில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க ECI திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 3, 2025

BREAKING:’செங்கோட்டையன் திமுகவுக்கு வந்தால் ஏற்போம்’

image

செப்.5-ல் மனம் திறந்து பேச இருப்பதாக, அதிமுகவை பரபரப்பாக்கி இருக்கிறார் செங்கோட்டையன். அவரது நகர்வுகளை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களை திமுக வரவேற்கும் எனத் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் திமுகவிற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News September 3, 2025

கூட்ட நெரிசலுக்கு GOOD BYE.. இனி படகில் ஜாலியா போலாம்!

image

மக்கள் நெரிசல் அதிகமுள்ள சென்னையில் வாட்டர் மெட்ரோ சேவையை தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் படகு சேவையை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகு போக்குவரத்து வரப்போகிறதாம். இதற்கான படகு நிலையங்கள், பணிமனைக்கான இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.

News September 3, 2025

Beauty Tips: இரவில் தலைக்கு குளிப்பவர்களின் கவனத்திற்கு

image

காலையில் எழுவதற்கு சோம்பேறித்தனமாக இருப்பதால் சிலர் இரவிலேயே தலைக்கு குளிக்கின்றனர். இப்படி தலைக்கு குளித்துவிட்டு தூங்குவதால் தலை முடிக்கு சில பிரச்னைகள் வருகிறது. இரவில் தலைக்கு குளித்துவிட்டு ஈரத்தலையுடன் தூங்குவதால் பொடுகு தொல்லை ஏற்படுமாம். இதனால் நாளடைவில் முடி உதிர்வு அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.

error: Content is protected !!