News May 17, 2024
இந்திய மசாலா பொருள்களுக்கு நேபாள் அரசு தடை

எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில், புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாகக் கூறி அவற்றை விற்பனை செய்யக் கூடாதென்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News August 21, 2025
மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய படம்

தனது படைப்புகளின் மூலம் தனித்துவமான இயக்குநராக தெரிந்த மிஷ்கின், சமீப காலங்களில் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், புதுப்படம் ஒன்றில் அவர், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இயக்குநர் யார் என்பது விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக ‘டிராகன்’ படத்தில் மிஷ்கினின் நடிப்பு பேசப்பட்டது.
News August 21, 2025
ஆபத்தான முறையில் விஜய் தொண்டர்கள்..

மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள், குவிந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, விஜய்யின் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் இருக்கும் தொண்டர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்க துடிக்கின்றனர். இதனால் மாநாட்டு பந்தலுக்குள் செல்ல முறையான பாதைகளை விட்டு விட்டு 10 அடி உயர தடுப்புகளை தாண்டி ஆபத்தான முறையில் தொண்டர்கள் செல்கின்றனர்.
News August 21, 2025
Health Tips: சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமா?

சப்பாத்தி மாவை பிசைந்த பிறகு அதை சமைக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். இவ்வாறு செய்வதால் அது விஷமாகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஃப்ரிட்ஜின் குளிர்ந்தநிலை பூஞ்சை வளர்ச்சியை மெதுவாக்குகிறது. இதனால் காற்று புகாத அளவுக்கு மாவை pack செய்து, அதை 1 நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் எனவும், 2 நாள்களை தாண்டினால் அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.