News March 17, 2024

நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

image

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News December 23, 2025

நெல்லை அருகே ரயில் மோதி பரிதாப பலி!

image

தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்தவர் சுந்தரவேல் (47). இவர் கடந்த சில மாதங்களாக வண்ணார்பேட்டையில் மனநல சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக நெல்லை வந்தார். குலவணிகர்புரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருச்செந்தூர் நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News December 23, 2025

நெல்லை: காதல் விவகாரத்தில் கார் ஏற்றி கொலை முயற்சி!

image

களக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (28). இவரும் திமுக நிர்வாகியான செல்வகருணாநிதி மகளும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று 2 பேரும் பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக காரில் வந்த செல்வகருணாநிதி, முத்துச்செல்வன் மீது ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை GH-ல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து களக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 23, 2025

நெல்லை: இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!