News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News December 17, 2025
நெல்லை: வரதட்சனை கொடுமை; கணவர் கைது

நெல்லையை சேர்ந்த செந்தில்முருகனின் மகளுக்கும் செந்தில்வேல் என்பவருக்கும் கடந்தாண்டு டிச.5-ல் திருமணம் நடந்தது. 10 பவுன் நகை, ரூ.10,000 ரொக்கம், பொங்கல் சீராக ரூ.50,000 பொருட்கள் கொடுத்தும் கணவன் செந்தில்வேல், தாய் லட்சுமி, சகோதரி பத்மா, மைத்துனர் முருகேஷ் ஆனந்த் ஆகியோர் பெண்ணை வரதட்சணை கேட்டு உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினர். தந்தை புகாரின் பேரில் செந்தில் வேல் -ஐ போலீசார் கைது செய்தனர் .
News December 17, 2025
நெல்லை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்! APPLY

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
நெல்லை: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <


