News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News December 31, 2025
நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் மகன் தமிழரசன்(25) என்பவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவை அடுத்து அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 31, 2025
நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் மகன் தமிழரசன்(25) என்பவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவை அடுத்து அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 30, 2025
நெல்லை: 16 ரவுடிகள் முன்னெச்சரிக்கையாக கைது

2026 புத்தாண்டு நாளை இரவு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்தியுள்ளனர். இதில் 1345 ரவுடிகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். மேலும் மாநகரில் 10 ரவுடிகளும், மாவட்டத்தில் 16 ரவுடிகளும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.


