News March 17, 2024

நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

image

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News December 19, 2025

நெல்லை – ஐதராபாத் நேரடி ரயில் இயக்கப்படுமா?

image

நெல்லை, குமரியில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவு விரைவில் இயக்கப்படுகின்றன. ஆனால், ஐதராபாத்துக்கு நெல்லை, குமரியில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. எனவே, நெல்லையிலிருந்து ஹைதராபாத்திற்கு தினசரி சிறப்பு ரயில் இயக்க தென்மத்திய ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

News December 19, 2025

நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருநெல்வேலி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 19, 2025

நெல்லை: ஆன்லைனில் போலி அக்கவுண்ட்., போலீஸ் எச்சரிக்கை

image

நெல்லை கல்லூரி மாணவி ஒருவர் கமிஷனர் ஆபிசில் சமூக வலைதளத்தில் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், சமூக வலைதளங்களில் போலி ஐடி-க்கள் உள்ளன எனவும், இந்த ஐ.டி-க்கள் மூலம் குற்றசெயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னா குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!