News October 12, 2025
மதுரையில் பிரசார பயணத்தை தொடங்குகிறார் நயினார்

மதுரையில் இன்று தனது முதல்கட்ட பிரசார பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்குகிறார். அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ தொடக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள் பங்கேற்க கூடாது உள்ளிட்ட 15-க்கும் அதிகமான நிபந்தனைகளை நயினாரின் பரப்புரைக்கு மதுரை போலீஸ் விதித்துள்ளது.
Similar News
News October 12, 2025
BREAKING: டாஸ்மாக் கடைகளில் முக்கிய மாற்றம்

TASMAC கடைகளில் கூடுதல் பண வசூலை முற்றிலும் ஒழிக்க MRP விலையை ஸ்கேன் செய்து செலுத்தும் புதிய வசதி இந்த வாரத்திற்குள் அமலுக்கு வரவுள்ளது. தற்போதுள்ள கருவிகளில் சில கடைகளில் ₹10, ₹20 கூடுதலாக சேர்த்து வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், ரொக்கப்பணம், டிஜிட்டல் பணம் வசூலுக்கு நவீன ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே சில தினங்களாக நாமக்கல், மதுரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
News October 12, 2025
புடினுக்கு நன்றி சொன்ன டிரம்ப்

USA அதிபர் டிரம்ப் உலகில் அமைதியை வளர்க்க முயற்சி மேற்கொண்டதாகவும், பல சிக்கலான விஷயங்களை தீர்த்து வைத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புடின் கூறியிருந்தார். இந்நிலையில், அதிபர் புடினின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த டிரம்ப், இப்பணி தொடரும் எனவும் கூறியுள்ளார். எப்போதும் எலியும், பூனையுமாய் இருக்கும் இருநாடுகளின் அதிபர்கள் இவ்விவகாரத்தில் இணக்கம் காட்டியிருப்பது உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
News October 12, 2025
சளி, இருமலை போக்க இந்த மூலிகை தேநீர்தான் பெஸ்ட்!

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வையுங்கள். பின் கற்பூரவள்ளி இலைகளை சேருங்கள். அதில் தோல் நீக்கிய இஞ்சி (சிறு)துண்டுகள், மிளகு மற்றும் ஏலக்காயை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதை வடிகட்டிக்கொள்ளவும். மிதமான சூட்டில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணமாகும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.