News October 17, 2025

National Roundup: பெங்களூரில் தமிழ் மாணவி கொலை

image

*பிஹார் தேர்தலில் 48 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. *குளிர் காலத்தில் ஜம்முவும், கோடை காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும் என அம்மாநில CM உமர் அப்துல்லா அறிவிப்பு. *பெங்களூருவில் காதல் விவகாரத்தில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை. *சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா – கர்நாடகா இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

Similar News

News October 18, 2025

இந்தியா அமைதியாக இருக்காது: PM மோடி

image

கொரோனாவிற்கு பிறகு உலகம் முழுவதும் போர்கள், பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8%ஆக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும், ஆபரேஷன் சிந்தூர், சர்ஜிகல் ஸ்டிரைக் என பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் ஏமாற்றம்

image

*டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில், ஆடவர் இரட்டையரில் சாத்விக், சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் லக்‌ஷயா சென் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். *புரோ கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் 51-49 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.

News October 18, 2025

மாநகராட்சி முறைகேட்டில் மர்மம் நீடிக்கிறது: நயினார்

image

மதுரை மாநகராட்சி முறைகேட்டில் சிறிய மீன்களை பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை, நெல்லை, மதுரை மேயர்கள் ராஜினாமா செய்துள்ளது, திமுகவின் நிர்வாக தோல்வியை காட்டுவதாக கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து CBI விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!