News October 12, 2025
National Roundup: டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி

*உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க ₹35,400 கோடி மதிப்பிலான வேளாண் திட்டங்களை PM மோடி தொடங்கி வைத்தார். *உத்தரகாண்டில் வினாத்தாள் கசிவால் 416 பணியிடங்களுக்கான அரசுத் தேர்வு ரத்து. *ராஜஸ்தானில் மங்கத் சிங் என்ற பாகிஸ்தான் உளவாளி கைது. *பிஹார் தேர்தலில் அசாசுதீன் ஓவைசியின் AIMIM கட்சி 100 இடங்களில் போட்டி என அறிவிப்பு. *டெல்லியில் 5 நாள்களுக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி.
Similar News
News March 22, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.21) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 22, 2026
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக இழுபறி ஏன்?

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி முடிந்தபாடில்லை. ஆளுக்கு 15 சீட் பிரிச்சுக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறதாம். ஆனால், ஆளுக்கு 14 சீட் பிரித்துக்கொண்டு, மீதியை விசிக & CPI-க்கு கொடுக்கலாம் என திமுக சொல்கிறதாம். இதை ஏற்க மறுக்கும் காங்., இங்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எங்களுக்கு உங்களைவிட ஒரு சீட்டாவது அதிகமாக வேண்டாமா என மல்லுக்கட்டுவது தான் இழுபறிக்கு காரணமாம்.
News March 22, 2026
தோனியின் கடைசி IPL இதுதான்: ராபின் உத்தப்பா

இந்தாண்டு IPL தொடரில் தோனி ஆலோசகராகவும் வீரராகவும் அணியில் செயல்படுவார் என CSK Ex வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடர்தான் CSK அணிக்காக மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடும் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளது; வெளியேறப்போகிறோம் என்பதை உணர்ந்து, அணியிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக்கொள்ள அவர் விரும்புவார் எனவும் கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?


