News November 29, 2024

‘தீரன்’ பட பாணியில் திருப்பூரில் கொலை

image

பல்லடம் அருகே பண்ணை வீட்டில் தங்கியிருந்த செந்தில்குமார், அவரது பெற்றோர் அமலாத்தாள், தெய்வசிகாமணி ஆகியோர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில், வீடு புகுந்த கொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் கொன்றுவிட்டு நகை, பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி வீட்டை குறிவைத்து ‘தீரன்’ பட பாணியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Similar News

News August 20, 2025

ரஷ்ய கச்சா எண்ணெயால் யாருக்கு லாபம்?

image

ரஷ்யாவிலிருந்து <<17464064>>மலிவு விலையில்<<>> வாங்கும் கச்சா எண்ணெயால், உண்மையில் பலனடைவது யார்? பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்காததால், அதன்மூலம் அரசும், தனியார் நிறுவனங்களும் நேரடியாக லாபமடைகின்றன. மேலும், அதிக விலைக்கு ஏற்ப, வரியும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. தவிர, இந்த எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலிய பொருள்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தனியார் நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கின்றன. மக்களுக்கு?

News August 20, 2025

கூட்டணி சிக்கலில் தவிக்கும் திருமாவளவன்: நயினார்

image

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எதிராக எதுவும் பேச முடியாமல் திருமாவளவன் சிக்கலில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவன் தனது நண்பராக இருந்தாலும், தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தர விவகாரத்தில் அவரது கருத்து தவறானது என்றார். இதே கருத்தை திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகமும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

News August 20, 2025

பள்ளி மாணவர்களுக்கு புதிதாக 5 AI படிப்புகள் அறிமுகம்

image

5 இலவச AI படிப்புகளை மத்திய அரசு ‘ஸ்வயம்’ தளத்தில் வழங்கியுள்ளது. <>Swayam<<>> ஆன்லைன் தளத்தில் AI/ML Using Python, AI கிரிக்கெட் பகுப்பாய்வு, இயற்பியல் AI, வேதியியல் AI, கணக்கியல் AI ஆகிய 5 படிப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக ஸ்வயம், திக்ஷா, என்பிடெல் உட்பட பல்வேறு டிஜிட்டல் தளங்கள் வழியாக இணையவழி படிப்புகளை கல்வி அமைச்சகம் இலவசமாக வழங்கி வருகிறது. SHARE IT.

error: Content is protected !!