News November 29, 2024
‘தீரன்’ பட பாணியில் திருப்பூரில் கொலை

பல்லடம் அருகே பண்ணை வீட்டில் தங்கியிருந்த செந்தில்குமார், அவரது பெற்றோர் அமலாத்தாள், தெய்வசிகாமணி ஆகியோர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில், வீடு புகுந்த கொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் கொன்றுவிட்டு நகை, பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி வீட்டை குறிவைத்து ‘தீரன்’ பட பாணியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
Similar News
News November 11, 2025
8-வது முறையாக முதல்வராகிறாரா நிதிஷ்?

பிஹார் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி நிதிஷ் குமார் 8-வது முறையாக அம்மாநில CM ஆக பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது. ஏற்கெனவே பிஹாரில் அதிக நாள்கள் CM அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமை கொண்ட நிதிஷ் குமார், BJP, RJD என மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறார். அவர் 1996-ல் இருந்து ஒருமுறை கூட சட்டமன்ற தேர்தலில் களம் கண்டதில்லை. சட்டமேலவை உறுப்பினராகவே இதுவரை நீடித்து வருகிறார்.
News November 11, 2025
இதெல்லாம் இவ்வளவு பழசா? என்ன சொல்றீங்க?

சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட சில உள்நாட்டு பிராண்டுகள், இன்றும் நமது அன்றாட வாழ்வில் இருந்து வருகின்றன. நமது தினசரி பயன்பாட்டில் இடம்பிடித்து காலத்தால் அழியாத பிராண்டுகளாக உருவெடுத்துள்ளன. அவை என்னென்ன பிராண்டுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் பயன்படுத்தும் பிராண்ட் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 11, 2025
BIHAR EXIT POLL: முழு விவரம்..!

பிஹாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின், கருத்துக்கணிப்பு முடிவுகள் இவைதான். அனைத்து கருத்துக்கணிப்புகளும் மீண்டும் NDA ஆட்சி அமைவது உறுதி என தெரிவிக்கின்றன. MGB கூட்டணி அதிகபட்சமாக 108 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜன் சுராஜ், இதர கட்சிகள் 2-13 வரை கைப்பற்ற கூடும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


