News April 2, 2025
13 வயதில் கொலை… சிறுவனின் கண்ணை மறைத்த ஆத்திரம்!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. செல்போனை பிடுங்கி தண்ணீரில் வீசிய பெண்ணை, 13 வயது சிறுவன் கொலை செய்துள்ளான். வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் சிறுவனின் போனை பிடுங்கி தண்ணீரில் வீசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்து விபரீத செயலில் ஈடுபட்ட சிறுவன், தற்போது போலீசாரின் பிடியில் சிக்கி இருக்கிறான்.
Similar News
News August 27, 2025
வீரநடை போடும் பி.வி.சிந்து

பாரிஸில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் அவர், மலேசியாவின் கருப்பதேவனை எதிர்கொண்டார். முதலில் 12-18 என பின்தங்கியிருந்த சிந்து, அதன் பிறகு சிறப்பாக ஆடி 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
News August 27, 2025
சண்டை போட்டாலும் சேர்ந்தே பயணித்தாக வேண்டும்: USA

இந்தியா – அமெரிக்கா இடையில் சிக்கலான உறவு நீடிப்பதாக அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெஸண்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரு நாட்டு தலைவர்களும் நட்புறவை பேணுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் சேர்ந்து பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 27, 2025
பிஹாரிகள் தாக்கப்படும் போது ஸ்டாலின் எங்கே போனார்? PK

தமிழ்நாட்டில் பிஹார் மைந்தர்கள் தாக்கப்பட்டபோது CM ஸ்டாலின் எங்கே போனார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலினை பிஹாருக்கு அழைத்ததன் மூலம் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிஹாரிகள் குறிவைத்து தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டதை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.