News May 16, 2024
கெஜ்ரிவால் உதவியாளர் தாக்கியது குறித்து எம்பி புகார்

கெஜ்ரிவாலின் உதவியாளர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து அவரின் இல்லத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரித்தனர். அப்போது 2 பக்க விரிவான புகாரை ஸ்வாதி மாலிவால் அளித்ததாகக் கூறப்படுகிறது.
Similar News
News January 10, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசித்த காந்தியவாதி மா.வன்னிக்காளையின் (92) சுவாசம் நின்றுபோனது. உடல் தகனம் செய்யப்பட்டாலும், அவரது கருத்துகளும், போதனைகளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்துக்கொண்டே இருக்கும். ஜனாதிபதியின் தேசிய விருது, தமிழக கவர்னரின் சிறந்த காந்தியவாதி விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவருக்கு நம்முடைய ஆத்மார்த்தமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
News January 10, 2026
₹35,000 சம்பளம்.. 764 காலிப்பணியிடங்கள்: APPLY

DRDO-வில் சீனியர் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீஷியன் பிரிவுகளில் காலியாக உள்ள 764 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி வாய்ப்பாகும். டிப்ளமோ, BSc, BLSc, MLSc, 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சீனியர் டெக்னிக்கல் உதவியாளருக்கு ₹35,000, டெக்னீஷியனுக்கு ₹19,900 சம்பளமாகும். 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். 18 – 28 வயதுக்கு உட்பட்டவர்கள், <
News January 10, 2026
சற்றுமுன்: ஹரி நாடார் அதிரடி கைது

தொழிலதிபர் ஒருவருக்கு ₹35 கோடி கடன் வாங்கித் தரும் பொருட்டு, காசோலையை சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் வழங்கியுள்ளார். இதற்காக ₹70 லட்சம் கமிஷனும் அவர் பெற்றுள்ளார். ஆனால், காசோலை போலியானது என தெரியவர, இதுகுறித்து தொழிலதிபர் போலீஸில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, மோசடி தொடர்பாக ஹரி நாடார் & அவரது கூட்டாளி பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


