News April 23, 2025
அமைச்சர் பதவியா? ஜாமினா? செந்தில் பாலாஜிக்கு செக்

அமைச்சர் பதவி வேண்டுமா?, ஜாமின் வேண்டுமா என செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமைச்சர் பதவியா? ஜாமினா? என்பதை (இரண்டில் ஒன்று) திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம்: பெ.சண்முகம்

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக அணியை தோற்கடிப்பது தான் தங்களுடைய முதன்மையான பணி என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, திமுக தங்களுக்கு துணை நிற்கிறது என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் சிபிஎம் எப்போதுமே பங்கு கேட்காது எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில், இதே நிலைப்பாட்டை திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனும் கூறியிருந்தார்.
News December 2, 2025
IPL-க்கு விடை கொடுத்த CSK சாம்பியன்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்காக EX-CSK வீரர் மோயின் அலி IPL தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக SM-ல் பதிவிட்டுள்ள அவர், கிரிக்கெட் உலகில் புதிய பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2021 மற்றும் 2023-ல் CSK அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மொயின் அலி முக்கியபங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே <<18424665>>பாப் டு பிளெஸ்சிஸும் <<>>இதுபோல அறிவித்திருந்தார்.
News December 2, 2025
பயிர் பாதிப்பு.. ஏக்கருக்கு ₹35,000 வழங்குக: வீரபாண்டியன்

கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 2.22 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக இந்திய கம்யூ. கட்சியின் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர்களின் துயர் துடைக்கும் வகையில் ஏக்கருக்கு ₹35,000 இழப்பீடாக தர வேண்டும் என TN அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆடு, மாடு இறப்புக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


