News April 23, 2025
ரேஷன் கடைகள் முன்பு நிழல் கூரை: அமைச்சர் அறிவிப்பு

அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நிழல் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் மக்கள் வரிசையில் நிற்கையில், வெயிலில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சக்கரபாணி, மரங்கள் நடவும், நிழல் கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News December 4, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், EPS முன்னிலையில், திருவாரூர் நகர திமுக பிரமுகர் சின்னவன் பிரகாஷ் அதிமுகவில் இணைந்தார். அதேபோல், திண்டுக்கல் மதிமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அனீஸ் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், திண்டுக்கல் சீனிவாசன் முன்பு தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
News December 4, 2025
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா

திருப்பரங்குன்றத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக உத்தரவு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சுவாமிநாதன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், சுவாமிநாதன் மீது HC தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
77 லட்சம் வாக்காளர்களை இழக்கிறதா தமிழகம்?

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோர் 25.72 லட்சம், கண்டறிய முடியாதோர் 8.95 லட்சம், நிரந்தர இடமாற்றமானோர் 39.27 லட்சம் என 77.52 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.


