News April 23, 2025
ரேஷன் கடைகள் முன்பு நிழல் கூரை: அமைச்சர் அறிவிப்பு

அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நிழல் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் மக்கள் வரிசையில் நிற்கையில், வெயிலில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சக்கரபாணி, மரங்கள் நடவும், நிழல் கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY NOW!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<
News December 1, 2025
செயலில் காட்டுங்க PM மோடி: செல்வப்பெருந்தகை

தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்கள் மூலம் PM மோடி காட்டவேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மத்திய அரசு சமஸ்கிருதத்துக்காக ₹2532 கோடி செலவிட்டதாகவும், ஆனால் தமிழ் உள்பட 5 மொழிகளுக்கு ₹147.56 கோடி மட்டுமே செலவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், PM தமிழை உயர்த்தி பேசியதில் பெருமை தான் என்ற அவர், ஆனால் செயலில் TN-ஐ புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார்.
News December 1, 2025
உலகின் தலையெழுத்து மாறிய தினம் இன்று!

2019, டிசம்பர் 1-ம் தேதி, உலக தலையெழுத்து மாறிய தினம். சீனாவின் ஊகானில் உலகின் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. வேகமாக பரவிய பாதிப்பால், உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன, பல குடும்பங்கள் பிரிந்தன, வீதிகள் வெறிச்சோடின, கோடிக்கணக்கான உயிர்கள் மறைந்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கொரோனா காயம் மனித மனங்களில் நீங்காத ரணமாக இருக்கும். உங்க வாழ்க்கையை கொரோனா எப்படி பாதித்தது?


