News April 23, 2025
ரேஷன் கடைகள் முன்பு நிழல் கூரை: அமைச்சர் அறிவிப்பு

அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நிழல் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் மக்கள் வரிசையில் நிற்கையில், வெயிலில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சக்கரபாணி, மரங்கள் நடவும், நிழல் கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News December 6, 2025
மரண தண்டனையை ஒழிக்க குரல் கொடுத்த கனிமொழி

இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்கும் வகையில், திமுக MP கனிமொழி லோக்சபாவில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். கடந்த காலங்களில் இதே கோரிக்கை பலமுறை முன்வைக்கப்பட்டது. ஆனால், கடுமையான குற்றங்களை தடுப்பதற்கு மரண தண்டனை அவசியம் என அது கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதாவை காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் கொண்டு வந்துள்ளார்.
News December 6, 2025
வரலாறு படைத்த தமிழகத்தின் தங்க மங்கைகள்!

மாலத்தீவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கேரம் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. குறிப்பாக, தமிழக வீராங்கனை கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளிலும் அவர் தங்கம் வென்றார். இதேபோல், காசிமா, மித்ரா ஜோடி, இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளது. மகளிர் குழு போட்டியிலும் இவர்கள் மூவரும் தங்கம் வென்றுள்ளனர். சூப்பர்ல!
News December 6, 2025
பெற்றோர்களே, பிள்ளைகளிடம் இதை எதிர்பார்க்காதீங்க

சில Modern Parents தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள்தான் Best Friend-ஆக இருக்க வேண்டும், பிள்ளைகள் தங்களிடம் அனைத்தையும் ஷேர் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் பதின்ம வயது பிள்ளைகளுக்கென தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும். எனவே அவர்கள் உங்களிடம் அனைத்தையும் சொல்லமாட்டார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கை என்ன நடக்கிறது என துருவித்துருவி விசாரிக்க வேண்டாம். சிக்கலில் இருந்தால் மட்டும் உதவுங்கள் போதும்.


