News August 5, 2024
நெல்லையில் இன்று மேயர் தேர்தல் (2/4)

இதையடுத்து நெல்லை மாநகராட்சியின் பொறுப்பு மேயராக துணை மேயர் ராஜு நியமிக்கப்பட்டார். காலியாக உள்ள மேயர் பதவிக்கு ஆக.5 அன்று மறைமுக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஜூலை.31 அன்று வேட்பு மனு விநியோகம் தொடங்கிய நிலையில் ஒருவர் கூட வேட்பு மனுவை வாங்கவில்லை. நேற்று நெல்லையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
Similar News
News January 16, 2026
நெல்லையில் ஒருவர் வெட்டிக் கொலை!

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அடைச்சாணி பகுதியை சேர்ந்த சரவணன் (47) என்பவர் இன்று (ஜன 16) காலை வாய்க்கால் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT.
News January 16, 2026
நெல்லை: நகைக் கடைக்காரரிடம் ரூ.6.50 லட்சம் மோசடி

நெல்லை டவுனில் நகைக்கடை நடத்துபவர் சுந்தர்ராஜன் (50). இவரது நண்பரான அமல்ராஜ் என்பவர் மற்றொரு நண்பரின் நகையை மீட்பதற்காக ரூ.6.50 லட்சம் வாங்கியுள்ளார். சுந்தராஜன் அதனை திருப்பி கேட்டபோது அமல்ராஜ் தரமறுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


