News September 27, 2024

கட்டுக்கட்டாக பணத்தை எண்ணும் பணி தீவிரம்

image

ATM கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சூரில் கொள்ளை நடந்தவுடன் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக திருச்சூர் எஸ்பி இளங்கோ கூறினார். நாமக்கல் அருகே பிடிபட்டவர்கள் ஹரியானாவின் <<14207793>>மேவாட் கொள்ளைக் கும்பல்<<>>, தென்னிந்தியாவில் 6 மாதங்களில் 15க்கும் மேற்பட்ட ATMகளில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 11, 2025

சிறுநீரை ரொம்ப நேரம் அடக்குகிறீர்களா?

image

சிறுநீர் கழிப்பது இயற்கையின் அழைப்பு. ஆனால், பலரும் சோம்பலின் காரணமாகவோ, பிஸியாக இருப்பதாலோ சிறுநீர் கழிப்பதை தள்ளிப் போடுகின்றனர். இதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நேரம் சிறுநீரை அடக்குவதால் இடுப்பு தசைகள் பாதித்து, குழந்தையின்மை பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்போதே, உங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்துவிடுங்கள்.

News July 11, 2025

2 திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை?

image

திருச்சியை பொறுத்தவரை அமைச்சர் கே.என். நேரு வைத்ததே திமுகவில் சட்டமாகும். ஆனால் திருச்சி மாவட்டத்தில் அவருக்கு எதிராக செளந்தரபாண்டியன் எம்எல்ஏ, பழனியாண்டி எம்எல்ஏ ஆகியோர் அரசியல் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேர் மீதும் நேரு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

News July 11, 2025

வடிவேலுவிடம் ஆட்டையப் போடும் ஃபகத் ஃபாசில்?

image

அல்சைமர் நோயாளியான வடிவேலு, ஏடிஎம்மில் இருந்து அதிகளவில் பணம் எடுப்பதை ஃபகத் ஃபாசில் பார்க்கிறார். எனவே, அந்த பணத்தை கொள்ளையடிக்க நினைக்கும் அவர், வடிவேலுவை நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கிலேயே அழைத்துச் செல்கிறார். இந்தப் பயணத்தில் என்ன நடக்கிறது? ஃபகத் கொள்ளையடித்தாரா, இல்லையா என்பதே மாரீசன் படத்தின் கதை என அதன் இயக்குநர் சுதீஷ் சங்கர் தெரிவித்துள்ளார். படம் பார்க்க ரெடியா?

error: Content is protected !!