News April 7, 2024
மல்லையா செய்த பாவங்களே காரணம்?

RCB அணியின் தொடர் தோல்விகளுக்கு தொழிலதிபர் விஜய் மல்லையாவின் செய்த பாவங்களே காரணம் என்று நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கூறிவருகின்றனர். ‘பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு, மல்லையா செய்த பாவம் ஆர்சிபி-க்கு’ என்பன போன்ற பதிவுகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் ₹9,000 கோடி மோசடி செய்த மல்லையா 2008 – 2016 வரை RCB அணியின் உரிமையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 11, 2025
Delhi Blast: NIA விசாரணை தொடக்கம்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை NIA-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ள இச்சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் டெல்லி போலீஸ் விசாரித்து வந்தது. இதில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கினை NIA-விற்கு உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது. டெல்லி போலீஸ் சேகரித்த ஆதாரங்களை பெற்றுள்ள NIA, விரைவில் முதற்கட்ட தகவல் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
News November 11, 2025
Richest Women Cricketer – இந்தியாவில் 3 பேர்

உலகின் முன்னணி பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் ஆண்களுக்கு நிகராக தங்களது திறமையை செல்வமாக மாற்றுகிறார்கள். இந்தப் பட்டியலில், இந்திய வீராங்கனைகள் 3 பேர், டாப் 10-ல் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார், அவர்களது சொத்து மதிப்பு என்ன என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த வீராங்கனை யார்?
News November 11, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹189 ரீசார்ஜ் பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பிளானை பயன்படுத்தி வந்த பிரீபெய்ட் பயனர்களுக்கு இனி ₹199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிளானில் 2 GB data, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 SMS தினசரி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாள்கள். முன்னதாக, ₹189 ரீசார்ஜ் பிளான் இன்டர்நெட் தேவையில்லாத பயனர்களுக்கு வசதியாக இருந்தது.


