News April 7, 2024

மல்லையா செய்த பாவங்களே காரணம்?

image

RCB அணியின் தொடர் தோல்விகளுக்கு தொழிலதிபர் விஜய் மல்லையாவின் செய்த பாவங்களே காரணம் என்று நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கூறிவருகின்றனர். ‘பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு, மல்லையா செய்த பாவம் ஆர்சிபி-க்கு’ என்பன போன்ற பதிவுகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் ₹9,000 கோடி மோசடி செய்த மல்லையா 2008 – 2016 வரை RCB அணியின் உரிமையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 7, 2026

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்

image

செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை தொடர்ந்து மற்றொரு அதிமுக மூத்த நிர்வாகி தவெகவில் இணைந்துள்ளார். வட சென்னையை சேர்ந்த அதிமுக Ex MLA வி.எஸ்.பாபு விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், EPS-க்கு ஆளுமை இல்லை என தெரிவித்ததோடு, அதிமுகவின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

News February 7, 2026

துரோகம் செய்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி: கனிமொழி

image

யாரோடு இருந்தால் TN பாதுகாப்பாக இருக்கும் என்பது தெளிவாக தெரிவதால் பெண்களும் இளைஞர்களும் திமுகவை ஆதரிக்கிறார்கள் என கனிமொழி பேசியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது ’வெற்றி நமது, வெற்றி நமது’ என சொல்ல தோன்றுகிறது என்றார். மேலும், TN-க்கு துரோகம் செய்த பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியுள்ளதாக அதிமுகவையும் விமர்சித்துள்ளார்.

News February 7, 2026

மன அழுத்தத்தை குறைக்கும் பொழுதுபோக்குகள்!

image

*ஓவியம் வரைவது, இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்வது மகிழ்ச்சி ஹார்மோனான டோபமைனை வெளியிட்டு மனதை நிம்மதியடைய செய்யும். *செடி வளர்ப்பில் ஈடுபடுவது, நடைபயிற்சி செய்வது மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. *பழங்கால/பழைய பொருள்களை பழுதுபார்த்து அதன்மீது வண்ணம் தீட்டுவது கவன ஆற்றலை அதிகரிக்கிறது. *பழங்கால முத்திரைகள், நாணயங்கள் சேகரிப்பு மூலம் சுய ஒழுக்கம், பொறுமை வளர்கிறது.

error: Content is protected !!