News September 27, 2025

குளறுபடிகளே உயிரிழப்புக்கு காரணம்: அன்புமணி

image

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும் கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள்தான் இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

Similar News

News September 28, 2025

சென்னை திரும்பினார் விஜய்

image

கரூரில் பரப்புரையை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்பினார். கரூர் கூட்ட நெரிசல் குறித்து திருச்சி, சென்னை விமான நிலையங்களில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதை தவிர்த்துவிட்டு அவர் சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் விரையும் நிலையில், விஜய் சென்னை திரும்பியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

News September 28, 2025

இதயம் நொறுங்கியது: விஜய் கண்ணீர்

image

கரூரில் நிகழ்ந்த துயரத்தால் இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என விஜய் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனை, துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறேன் எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 28, 2025

தவெக தலைவர்கள் எங்கே?

image

கரூரில் இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ளது. அரசு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த சூழலில் தவெக தரப்பில் இருந்து யாரும் விளக்கமளிக்கவில்லை. விஜய்யின் பதிலுக்காகவே காத்திருக்க வேண்டியிருக்கிறது. இச்சூழலை எதிர்கொள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவில் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!