News February 24, 2025

9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா: சேகர்பாபு

image

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், கோவை பட்டீஸ்வரசாமி, மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பாக விழா கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி நாளில் பக்தர்களுக்கு இடைவிடாது பிரசாதம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News February 24, 2025

அரசு ஊழியர்கள்: களமிறங்கும் 4 அமைச்சர்கள் குழு

image

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது.

News February 24, 2025

கர்நாடகா – மகா., இடையே போக்குவரத்து முடக்கம்

image

கர்நாடகாவின் பெலகாவி, மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருப்பதால் மராத்தி மொழி பேசும் மக்களே அதிகம். பிப்.21ல் இங்கு கர்நாடக அரசு பஸ்ஸில் 14 வயது மராத்தி சிறுமியிடம், கன்னடத்தில் பேசுமாறு கண்டக்டர் கூறியதால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு சித்ரதுர்காவில் மகாராஷ்டிரா அரசு பஸ்ஸூம், புனேவில் கர்நாடக அரசு பஸ்ஸூம் சூறையாடப்பட்டன. இதனால், 2 மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது.

News February 24, 2025

காலை அலாரம் அடித்த பிறகு தான் எழுந்திருக்கிறீர்களா?

image

தினமும் காலையில் அலாரம் அடித்த பிறகு தான், கண்விழித்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. திடீரென சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure சட்டென அதிகரிக்குமாம். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய பிரச்னைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார்கள். இதற்கு Morning Blood Pressure Surge எனப் பெயர்.

error: Content is protected !!