News April 22, 2025
எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி ரூ.1,000 உயர்வு

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று அச்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விலையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று முதல் (ஏப்.22) எம்.சாண்ட், பி.சாண்ட், கிரஷர் ஜல்லி விலையை ₹1,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
உலக VVIP-கள் கூடும் திருமணம்: யார் இந்த ராமராஜு?

டிரம்ப்பின் மகன் உள்ளிட்ட உலக பிரபலங்களே நேரில் வந்து வாழ்த்த, உதய்ப்பூர் பங்களாவில் தடபுடலாக தனது மகளின் திருமணத்தை நடத்துகிறார் தொழிலதிபர் ராமாராஜு. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Ingenus Pharmaceuticals நிறுவனத்தின் தலைவர் தான் ராமராஜு. அமெரிக்க மருத்துவ துறையில் இவர் நன்கு பரிச்சயமானவர். இவரது நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.
News November 22, 2025
தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன் காலமானார்

சாகித்ய அகாடமி விருது வென்ற தமிழகத்தின் மூத்த கவிஞர் தமிழன்பன்(92) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஈரோடு சென்னிமலையில் பிறந்த அவர், ஓவியர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள அவர், தமிழில் எண்ணற்ற கவிதை தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். RIP
News November 22, 2025
கர்ப்பிணிகளுக்கு முற்றிலும் இலவசம்..!

பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்லும் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல ஊர்தி சேவை திட்டத்தின் கீழ் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. அரசு ஹாஸ்பிடலில் பிரசவம் பார்த்தால் மட்டுமே இந்த சேவை கிடைக்கும். அந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு செல்ல சேவை வழங்கப்படாது. இந்த சேவையை பெற, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது 102 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அவசர நேரத்தில் உதவும் SHARE THIS.


