News April 29, 2025

‘பாகிஸ்தான் வாழ்க’ என்றவர் அடித்துக் கொலை

image

‘பாகிஸ்தான் வாழ்க’ என்று சொன்னதற்காக ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மங்களூருவில் கடந்த 27-ம் தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் மேட்சின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

Similar News

News January 11, 2026

இந்தியாவுக்கு பின்னடைவு.. பண்ட் விடுவிப்பு?

image

NZ-க்கு எதிரான ODI தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பயிற்சியின் போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக 2024 ஆகஸ்டில் நடந்த SL-க்கு எதிரான ODI தொடரில் விளையாடினார். இடைப்பட்ட காலத்தில் அணியில் இடம்பெற்றாலும், Playing 11-ல் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போதும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்கிறது.

News January 11, 2026

டிரோன் காட்சியை மெய்மறந்து ரசித்த PM மோடி

image

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தில் PM மோடி நேற்று இரவு சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கண்கவர் டிரோன் காட்சியை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது X பக்கத்தில் பகிர்ந்த அவர், நமது தொன்மையான நம்பிக்கையும், நவீன டெக்னாலஜியும் இணைந்து, இந்தியாவின் கலாசார சக்தியை உலகிற்கு உணர்த்தியதாக பதிவிட்டுள்ளார்.

News January 11, 2026

மெகா சாதனைக்கு ரெடியான ‘ரன் மெஷின்’..!

image

களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனையை படைத்து வருகிறார் இந்தியாவின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி. அந்த வகையில், நாளை(ஜன.11) நியூசிலாந்துக்கு எதிரான முதல் ODI போட்டியில் அவர் 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்துவார். சச்சின்(34,357), சங்கக்காரா(28,016) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!