News April 29, 2025
‘பாகிஸ்தான் வாழ்க’ என்றவர் அடித்துக் கொலை

‘பாகிஸ்தான் வாழ்க’ என்று சொன்னதற்காக ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மங்களூருவில் கடந்த 27-ம் தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் மேட்சின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
Similar News
News December 25, 2025
BREAKING: நாளை முதல்.. அரசு வெளியிட்டது

ரயில் கட்டண உயர்வு நாளை(டிச.26) முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சாதாரண வகுப்புகளில் 215 km வரை விலை மாற்றமில்லை. 215 கிமீக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 பைசா அதிகரிக்கும். மேலும், மெயில்& AC இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2 பைசா அதிகரிக்க உள்ளது. 500 கிலோ மீட்டர்களுக்கு AC இல்லாத வகுப்புகளில் தற்போது உள்ள விலையை விட ₹10 அதிகமாகும்.
News December 25, 2025
அழகே பொறாமைப்படும் ஹிமாலயன் மோனல் PHOTOS

மயில் வண்ணங்களை கொண்ட இந்த பறவையின் பெயர் ஹிமாலயன் மோனல். இமயமலையில் காணப்படும் மோனல், நேபாளத்தின் தேசிய பறவையாக அறியப்படுகிறது. மின்னும் இறகுகளுடன் பிரகாசமாக ஜொலிக்கும் பறவையின் கிரீடம், அதன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பனிப்பாறைகளில் துள்ளி குதித்து விளையாடும் மோனலின் அழகை ரசிக்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்யுங்கள். பிடிச்சிருந்தா Like & SHARE
News December 25, 2025
பயங்கர ஏவுகணையை பரிசோதித்த இந்தியா

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் K-4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தியால் இயங்கும் ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் இருந்து, 3,500 கி.மீ., தூரம் பயணித்து தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM) சோதனை செய்யப்பட்டுள்ளது. US, சீனா, ரஷ்யா 5,000 கி.மீ., தூரம் சென்று தாக்கும் SLBM-ஐ கொண்டுள்ள நிலையில், இந்தியா அதை நெருங்கி வருகிறது.


