News April 29, 2025
‘பாகிஸ்தான் வாழ்க’ என்றவர் அடித்துக் கொலை

‘பாகிஸ்தான் வாழ்க’ என்று சொன்னதற்காக ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மங்களூருவில் கடந்த 27-ம் தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் மேட்சின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
Similar News
News December 31, 2025
ஷமி விஷயத்தில் பிசிசிஐ U-Turn?

நல்ல ஃபார்மில் இருந்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் ஷமி இடம்பிடிக்காதது பேசுபொருளானது. இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் ஷமியின் செயல்பாட்டை பிசிசிஐ கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. ஷமி உடற்தகுதியுடன் இருந்தால் நியூசிலாந்து ODI தொடருக்கு அவரை தேர்வு செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். ஷமி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் 2027 WC வரை இந்திய அணியில் நீடிப்பார்.
News December 31, 2025
வடமாநில இளைஞர் உயிரிழப்பா? Fact Check

திருத்தணி சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு ஆளான வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாக SM-ல் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்றும் அவர் சொந்த ஊர் திரும்பிவிட்டதாகவும் வடக்கு மண்டல ஜ.ஜி கூறியுள்ளார். இதனிடையே அந்த இளைஞர் கை, தலையில் கட்டுகளுடன் உள்ள வீடியோ வைரலாகியுள்ளது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
News December 31, 2025
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்!

*உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட
வைக்கக்கூடாது *சிரிக்காத நாளெல்லாம் வீணான நாட்களே *இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உட்பட *சர்வாதிகாரிகள் தங்களை சுதந்திரமாக இருந்துக் கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் *உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை *புன்னகைத்துப் பாருங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்


