News April 29, 2025
‘பாகிஸ்தான் வாழ்க’ என்றவர் அடித்துக் கொலை

‘பாகிஸ்தான் வாழ்க’ என்று சொன்னதற்காக ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மங்களூருவில் கடந்த 27-ம் தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் மேட்சின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
Similar News
News November 2, 2025
நடிகை அர்ச்சனா தற்கொலையா? CLARITY

பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான VJ அர்ச்சனா, தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியுள்ளார். இதை பார்த்து கடுப்பான அர்ச்சனா, அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், டேய்! புருஷன் கூடச் சண்டை போட்டுத் தற்கொலை… நோ சான்ஸ்! அவரை நான்தான் அடிப்பேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.
News November 2, 2025
காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் போய்விட்டது: PM

ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து காங்., பாக்., இன்னும் மீளவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் பிரசாரத்தில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாடே கொண்டாடிய நிலையில், காங்., RJD அதை விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் பறிபோய்விட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், CM பதவிக்காக எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 2, 2025
பிரசவ நாள் நெருங்கும்போது செய்ய வேண்டியவை

➤குழந்தையின் நிலை, இதயத்துடிப்பு, தாயின் ஆரோக்கியம் ஆகியவை சீராக உள்ளனவா என்பதை தொடர்ந்து செக் பண்ணுங்க ➤சத்தான உணவு, பழம், பால் போன்றவற்றைச் சீராக எடுத்துக் கொள்ளவும் ➤மெதுவான நடைபயிற்சி/மருத்துவர் பரிந்துரைத்த யோகா செய்யலாம் ➤ஆடைகள், டயப்பர், மருத்துவ ஆவணங்கள், சார்ஜர், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள் ➤ கர்ப்பிணியை தனியாக விட வேண்டாம். SHARE THIS.


