News April 8, 2024
வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இன்று முதல் போராட்டம்

தமிழகம் முழுவதும் இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் ஏப்.19 வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறை இ-ஃபைலிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கேற்ப எவ்வித கட்டமைப்பு வசதிகளையும் நீதிமன்றங்களில் செய்து தரவில்லை. இதனால், வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக கூறினர்.
Similar News
News March 22, 2026
பிரேமலதாவுக்கு புது அதிர்ச்சி.. கூட்டணியில் பரபரப்பு

திமுக கூட்டணியில் 10-க்கும் குறைவான சீட்டுகளை பெற்றால் பதவி விலகுவோம் என தேமுதிக தலைமைக்கு மாவட்டச் செயலாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது, பிரேமலதாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் தேமுதிகவுக்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News March 22, 2026
தவெகவில் தஞ்சம் புகும் அரசியல் பிரமுகர்கள்

புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளில் சீட் கிடைக்காத பிரமுகர்கள் தவெகவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனராம். பாஜக Ex MLA சாமிநாதன், அதிமுக Ex MLA பெரியசாமி மற்றும் அசனா, காங்., Ex MLA தனவேலு என இருந்து சமீபத்தில் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தவெகவில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொது செயலாளர் ஆனந்த் முயற்சியில் மேலும் பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 22, 2026
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கால அவகாசம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. இந்த <


