News May 2, 2024

சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்குட்பட்டது

image

சட்டம்-ஒழுங்கு மாநில அதிகார வரையறைக்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மேற்குவங்க அரசு தரப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரம் தனக்கே இருப்பதாக சிபிஐ கூறுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம், ராணுவத்தினர் முகாமில் குற்றமிழைத்தாலும் மாநில போலீசிடமே ஒப்படைக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.

Similar News

News September 2, 2025

தினமும் லேட்டாக தூங்குபவரா நீங்கள்?

image

தினமும் இரவில் யூடியூப், வெப்சீரிஸ், ரீல்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? இத கவனிங்க. நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை., ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம். ஆகவே, நேரத்துக்கு தூங்குங்க.

News September 2, 2025

தேர்தல் பரப்புரைக்காக மெகா பிளான் போடும் விஜய்

image

2 மாநாடுகளை நடத்திய தவெக தலைவர் விஜய், அடுத்ததாக தேர்தல் பரப்புரைக்கு திட்டமிட்டு வருகிறார். வருகிற 17-ம் தேதி பெரியார் பிறந்த நாளன்று மக்கள் சந்திப்பை தொடங்குவதே அவரது திட்டமாம். அதுவும் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலேயே பரப்புரையை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பனையூர் தவெக அலுவலகத்தில் பரப்புரை வாகனம் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை வியூகம் வெல்லுமா?

News September 2, 2025

இந்தியா இறங்கி வந்தது: டிரம்ப்

image

50% வரி விதித்தும் இந்தியா இறங்கி வராததால், தொடர்ந்து டிரம்ப் விமர்சித்து வருகிறார். வர்த்தக பேச்சுவார்த்தையில், அமெரிக்க பொருள்கள் மீது, தான் விதிக்கும் வரியை முற்றாக விலக்கிக் கொள்வதாக இந்தியா கூறியதாகவும், ஆனால், காலம் கடந்துவிட்டது என தான் ஏற்க மறுத்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா- அமெரிக்க வர்த்தகம் என்பது ஒருதரப்புக்கு (அமெரிக்காவுக்கு) சேதாரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!