News August 22, 2024
கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை: முதல்வர்

கருணாநிதியின் அனைத்து நூல்களும், நூலுரிமை தொகையின்றி நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆயிரக்கணக்கான கடிதங்களை அவர் எழுதியுள்ளார். மேலும், 75 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதை தமிழறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.
Similar News
News December 7, 2025
TN-ல் பெரியாரின் சமத்துவ தீபம் தான் எரியும்: CM

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரிவினையை ஏற்படுத்த பாஜகவினர் நினைப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மலிவான அரசியலை பாஜக செய்வதாக விமர்சித்த அவர், இந்த கூட்டம் குறித்து மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும் எனக்கூறினார். மதுரையில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் எப்போதும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும் என குறிப்பிட்டார்.
News December 7, 2025
பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.
News December 7, 2025
வானில் இருந்து விழுந்த மர்ம சிவப்பு தூண்கள்.. PHOTOS!

வானில் இருந்து ரெட் கலர் தூண்கள் விழுவதை போல நிகழ்ந்த சம்பவத்தின் போட்டோதான் ட்ரெண்டிங். ஏதோ ஏலியன் ஸ்பேஸ்ஷிப்போ என கற்பனையை உலாவ விட வேண்டாம். இது ஒருவகை மின்னல். Sprites எனப்படும் இவை இடி மின்னலுடன் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50-90 கிமீ உயரத்தில் தோன்றும். இத்தாலியில் நடந்த இந்த அதிசய வானிலை நிகழ்வின் போட்டோவை நீங்க மட்டும் பார்த்து ரசிக்காமல், நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


