News April 11, 2024
தாயார் இறுதிச்சடங்கிற்கு செல்ல காங். அரசு அனுமதிக்கவில்லை

அவசர நிலை காலத்தில், தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்க காங்கிரஸ் அரசு பரோல் தரவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1975இல் அவசர நிலை அமலில் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் கைதாகி சிறையில் இருந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த ராஜ்நாத், தாயார் இறுதிசடங்கில் பங்கேற்க கூட பரோல் தரவில்லை, அப்படியிருக்கையில் பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் தற்போது விமர்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது: SC

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், இதில் தலையிட்டு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் SC தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக SC உத்தரவின்பேரில் CBI விசாரணை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.
News January 22, 2026
தமிழக அரசு தோல்வி கண்டுவிட்டது: EPS

பிரதமர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என EPS நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லை என சாடிய அவர், எல்லாதுறைகளிலும் திமுக அரசு தோல்வி கண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை இல்லாத வளர்ச்சியை தேர்தல் வெற்றிக்கு பின் தமிழ்நாட்டுக்கு அதிமுக வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 22, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 குறைந்தது

<<18922286>>தங்கம்<<>> மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்து நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 குறைந்து ₹340-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 குறைந்து ₹3.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக வெள்ளியும் வரலாறு காணாத உச்சம் பெற்ற நிலையில், இன்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம், வெள்ளி வாங்க இதுதான் நல்ல சான்ஸ் என நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


