News April 11, 2024

தாயார் இறுதிச்சடங்கிற்கு செல்ல காங். அரசு அனுமதிக்கவில்லை

image

அவசர நிலை காலத்தில், தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்க காங்கிரஸ் அரசு பரோல் தரவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1975இல் அவசர நிலை அமலில் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் கைதாகி சிறையில் இருந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த ராஜ்நாத், தாயார் இறுதிசடங்கில் பங்கேற்க கூட பரோல் தரவில்லை, அப்படியிருக்கையில் பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் தற்போது விமர்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News April 25, 2025

BREAKING: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து!

image

இபிஎஸ்-க்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக, கே.சி.பழனிசாமி இபிஎஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.

News April 25, 2025

BREAKING: கஸ்தூரி ரங்கன் காலமானார்

image

இஸ்ரோ EX தலைவர் கஸ்தூரி ரங்கன் (80) காலமானார். பெங்களூரில் உள்ள இல்லத்தில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கஸ்தூரி ரங்கன், இஸ்ரோ தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மேலும் மாநிலங்களவை எம்பியாக 2003 முதல் 2009-ம் ஆண்டு வரையிலும், திட்ட கமிஷன் உறுப்பினராகவும், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். RIP.

News April 25, 2025

MRK பன்னீர் செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

image

வருமானத்திற்கு அதிகமாக ₹3 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 2006-11 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

error: Content is protected !!