News April 11, 2024

தாயார் இறுதிச்சடங்கிற்கு செல்ல காங். அரசு அனுமதிக்கவில்லை

image

அவசர நிலை காலத்தில், தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்க காங்கிரஸ் அரசு பரோல் தரவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1975இல் அவசர நிலை அமலில் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் கைதாகி சிறையில் இருந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த ராஜ்நாத், தாயார் இறுதிசடங்கில் பங்கேற்க கூட பரோல் தரவில்லை, அப்படியிருக்கையில் பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் தற்போது விமர்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 12, 2025

விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

image

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

இல.கணேசனுக்கு 3வது நாளாக தீவிர சிகிச்சை

image

நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக. 8-ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்ததால் தலையில் காயமடைந்த அவர், சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ICU-வில் 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் குழுவினர் இல. கணேசனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

News August 12, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!