News April 11, 2024

தாயார் இறுதிச்சடங்கிற்கு செல்ல காங். அரசு அனுமதிக்கவில்லை

image

அவசர நிலை காலத்தில், தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்க காங்கிரஸ் அரசு பரோல் தரவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1975இல் அவசர நிலை அமலில் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் கைதாகி சிறையில் இருந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த ராஜ்நாத், தாயார் இறுதிசடங்கில் பங்கேற்க கூட பரோல் தரவில்லை, அப்படியிருக்கையில் பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் தற்போது விமர்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

குளிர்காலத்தில் உணவை சூடுபடுத்துகிறீர்களா?

image

சுடச்சுட உணவை சாப்பிட வேண்டும் என சிலர், குளிர்காலத்தில் மீண்டும் மீண்டும் உணவை சுட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால், இது உடல் ஆரோக்யத்தை பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அடிக்கடி சுட வைப்பதால் உணவில் பாக்டீரியா, பூஞ்சைகள் வளரும் வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் செரிமான பிரச்னைகள், வாந்தி, கல்லீரல் பாதிப்பு, சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாவதாக கூறுகின்றனர்.

News November 13, 2025

International Roundup: பாலியல் குற்றவாளியுடன் டிரம்ப்

image

*ஈராக் தேர்தலில் தற்போதைய PM முகமது ஷியா அல்- சூடானி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு. *ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க இன்னும் அதிக அழுத்தம் தர ஜி7 நாடுகள் முடிவு. *பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் டிரம்ப் இருந்த ஆவணங்களை ஜனநாயக கட்சி வெளியிட்டது. *குவாண்டம் கம்ப்யூட்டருக்கான சோதனை சிப்பை (LOON) கண்டுபிடித்துள்ளதாக IBM அறிவிப்பு. *சூடான் உள்நாட்டு போரை நிறுத்த ஐநா அழைப்பு.

News November 13, 2025

நவம்பர் 13: வரலாற்றில் இன்று

image

*1935 – பாடகி பி. சுசீலா பிறந்தநாள். *1947 – சோவியத் யூனியன் AK-47 துப்பாக்கியை வடிவமைத்தது. *1958 – எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பிறந்தநாள். *1984 – நடிகர் விக்ராந்த் பிறந்தநாள். *1985 – கொலம்பியாவில் எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர். *1993 – இலங்கையின் ராணுவ கூட்டுத்தளங்களை தாக்கி, ராணுவ தளவாடங்களை விடுதலை புலிகள் கைப்பற்றினர்.

error: Content is protected !!