News April 11, 2024

தாயார் இறுதிச்சடங்கிற்கு செல்ல காங். அரசு அனுமதிக்கவில்லை

image

அவசர நிலை காலத்தில், தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்க காங்கிரஸ் அரசு பரோல் தரவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1975இல் அவசர நிலை அமலில் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் கைதாகி சிறையில் இருந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த ராஜ்நாத், தாயார் இறுதிசடங்கில் பங்கேற்க கூட பரோல் தரவில்லை, அப்படியிருக்கையில் பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் தற்போது விமர்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

விஜய்க்கு அரசியல் அட்வைஸ் கொடுத்த ரோஜா

image

விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், மக்களோடு மக்களுக்காக களப்பணியாற்ற வேண்டும் என ரோஜா தெரிவித்துள்ளார். தேர்தலை பொறுத்தவரை கடைசி 2 மாதங்கள்தான் முக்கியமானது. அப்போது யார் மக்களை கவர்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். பணம் கொடுத்தோ, உண்மை, பொய் என எதையாவது சொல்லியோ மக்களை கவர வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

பிஹாரில் CM ஸ்டாலின் பேரணி சென்ற தொகுதியின் ரிசல்ட்

image

ECI-ன் SIR-ஐ எதிர்த்து பிஹாரின் முசாபர்பூர் தொகுதியில், MGB கூட்டணி கட்சி தலைவர்களுடன் CM ஸ்டாலின் பேரணி சென்றார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பிரசாரமும் செய்தார். அந்த தொகுதியில் பாஜகவின் ரஞ்சன் குமார் 1,00,477 வாக்குகளையும், காங்கிரஸின் பிஜேந்திரா சௌத்ரி 67,820 வாக்குகளை பெற்றுள்ளனர். இறுதியில் 32,657 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

News November 15, 2025

நவம்பர் 15: வரலாற்றில் இன்று

image

*1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1949 – மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். *2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. *1875 – விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள். *1982 – காந்தியவாதி வினோபா பாவே உயிரிழந்த நாள். *1986 – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள்.

error: Content is protected !!