News September 30, 2025

கரூர் வருகிறார் கே.சி.வேணுகோபால்

image

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களை காங்., பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் சந்திக்கிறார். இதற்காக காலை 9.20 மணிக்கு விமானத்தில் கோவை வரும் அவர், பகல் 12 மணிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். தொடர்ந்து மாலை கட்சி நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். இச்சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய நிலையில், வேணுகோபாலின் வருகை அரசியல் கவனம் பெற்றுள்ளது.

Similar News

News September 30, 2025

தங்கம் அவசியம் தானா? எச்சரிக்கும் நிபுணர்

image

தங்கத்தை வாங்கி வைப்பது ஒரு போதும் உங்கள் செல்வத்தை உயர்த்தாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு பதிலாக கோல்ட் ETF, Share market-ல் நீண்ட காலம் முதலீடுகளை செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகும் எனவும் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் தங்கம் முதலீடாக பார்க்காமல் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால், தங்கத்தில் நான்கில் 1 பங்கு மட்டும் முதலீடு செய்வதே சரியாக இருக்கும் என்கின்றனர். SHARE.

News September 30, 2025

இனி வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டை பெறலாம்

image

இனி ஆதார் அட்டை பெற இ-சேவை மையங்கள் செல்ல தேவையில்லை. MyGov உதவி மைய எண்ணான +91-9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் Save செய்யுங்கள். இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள். பின்னர், அதில் வரும் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்திருப்பது அவசியம்.

News September 30, 2025

‘செந்தில் பாலாஜி பெயரை எழுதி வைத்துவிட்டு மரணம்’

image

தவெக தொண்டரின் மரணக் கடிதத்தில் ‘செந்தில் பாலாஜியே காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கரூர் விஜய் வருகையின்போது, போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. ஆனாலும், விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தனர். செந்தில் பாலாஜி நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, அவர் மூலம் கரூர் துயரச் சம்பவம் நடைபெற்றது. இதற்கு போலீசும் உடந்தை. எனவே அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!