News September 30, 2025
கரூர் வருகிறார் கே.சி.வேணுகோபால்

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களை காங்., பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று நேரில் சந்திக்கிறார். இதற்காக காலை 9.20 மணிக்கு விமானத்தில் கோவை வரும் அவர், பகல் 12 மணிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். தொடர்ந்து மாலை கட்சி நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். இச்சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய நிலையில், வேணுகோபாலின் வருகை அரசியல் கவனம் பெற்றுள்ளது.
Similar News
News November 12, 2025
விஜய் கட்சியில் சண்டை வெடித்தது

விஜய் – ஆதவ் அர்ஜுனா இடையில் மிக கடுமையான சண்டை நடந்து வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களுக்கு, சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்ட மேடையில் விஜய் அஞ்சலி செலுத்த, ஆதவ் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதேபோல், மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் கட்சியின் நிலைப்பாட்டை மதிக்காமல் செயல்படுவது, திமுக மீது தனிமனித வெறுப்பு கொண்டு பேசுவது விஜய்க்கு பிடிக்கவில்லையாம்.
News November 12, 2025
ரஜினியை தொடர்ந்து கமலை இயக்குகிறாரா சுந்தர் சி?

‘அருணாச்சலம்’ படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினி படத்தை இயக்குவேன் என எதிர்பார்க்கவே இல்லை என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இதுபோன்று மீண்டும் கமல்ஹாசனை இயக்குவதற்கான வாய்ப்பு அமையலாம் எனவும், அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், அந்த படத்தையும் மிகச்சிறப்பாக இயக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கமல் நடிப்பில் ‘அன்பே சிவம்’ படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார்.
News November 12, 2025
National Roundup: PM தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

*ஜனாதிபதி முர்முவுக்கு போட்ஸ்வானா நாட்டில் பாரம்பரிய வரவேற்பு. *டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக PM மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம். *இந்தியாவின் புது அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம். *பதற்றங்களுக்கு மத்தியில் PAK எல்லையில் இந்திய ராணுவம் பயிற்சி. *மேகதாது அணையால் TN-க்கு பாதிப்பு இல்லை சித்தராமையா உறுதி. *டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ₹10 லட்சம் இழப்பீடு.


