News April 27, 2025
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்எல்சிக்கு ஒரு நீதியா?

என்எல்சியால் நிலத்தடி நீர், நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஏற்படுத்திய தீங்குகளைவிட பல மடங்கு கேடுகளை என்எல்சி ஏற்படுத்தியுள்ளது. என்எல்சியால் கடலூரில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள அன்புமணி, உடனடியாக என்எல்சியை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 7, 2026
கருணாநிதிக்கு கேப்டன் மீது அவ்வளவு பாசம்: பிரேமலதா

இவ்வளவு நாள் தவறான கூட்டணியில் இருந்ததாக பிரேமலதா கூறியுள்ளார். கருணாநிதிக்கு விஜயகாந்த் மீது அவ்வளவு பாசம் என்ற அவர், கருணாநிதி CM-ஆக இருந்தபோது சந்திக்க நேரம் கேட்டால் அடுத்த 5-வது நிமிடம் ’வா’ என போன் வரும் என்றார். இதை நினைக்கும்போது ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையவில்லை என Feel பண்ணுவதாகவும் கருணாநிதி & விஜயகாந்தின் ஆசிர்வாதத்தால் தற்போது கூட்டணி அமைந்துள்ளது என்றும் பேசியுள்ளார்.
News April 7, 2026
காங்., வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு

விளவங்கோடு தொகுதியின் காங்., வேட்பாளர் டி.டி.பிரவீனுக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். TN, கேரளாவில் வாக்குரிமை வைத்திருப்பதாக வாதிட்டு, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதேநேரம், மேலூர் தொகுதியின் காங்., வேட்பாளர் விஸ்வநாதனுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
News April 7, 2026
மரண தண்டனைக்கு எதிரானவன்: கமல்

தனிப்பட்ட முறையில் தான் மரண தண்டனைக்கு எதிரானவன் என கமல் பதிவிட்டுள்ளார். சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், கொடுங்குற்றம் இழைத்தவர்கள் சலுகைகள் இன்றி ஆயுள் உள்ளவரை சிறை வைக்கப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துவிட்டனரே என்று குறிப்பிட்டுள்ளார்.


