News April 13, 2024

சற்றுமுன்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை

image

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றங்களுக்கு ஏப்.19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்கு பின் விசாரணைக்கு வரும் எனவும் தெரிகிறது. குறிப்பாக, கோடநாடு வழக்கு ஏப்.22, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Similar News

News April 30, 2025

மே 29-ல் வரலாறு படைக்கும் இந்தியர்!

image

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் SpaceX Felcon ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளார். Axiom 4 என்ற தனியார் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.

News April 30, 2025

இந்தியாவில் வேகமெடுக்கும் ஐபோன் உற்பத்தி

image

ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், பெங்களூருவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில், புதிய ஐபோன் 16 மாடல்களின் உற்பத்தி விரைவில் தொடங்கப்பட உள்ளன. சீன இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்த நிலையில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

News April 30, 2025

நேருவின் பொன்மொழிகள்

image

*கடப்பதற்கு தடைகளும் தீர்ப்பதற்கு பிரச்னைகளும் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பற்று போய்விடும். *செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம். *உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒடுக்கிவிட முடியாது. *அச்சம் போன்று மிக மோசமாக ஆபத்து எதுவுமில்லை. *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை.

error: Content is protected !!