News July 14, 2024
ஜெகநாதர் கோயில் கருவூலம் கணக்கிடப்பட்ட வரலாறு

பூரி ஜெகநாதர் கோயில் கருவூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு கருவூலம் திறக்கப்பட்டு, அதில் இருந்த பொக்கிஷங்கள் எண்ணப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணிகள் 70 நாள்கள் நடைபெற்றது. அதில், 128.38 கிலோ எடையுள்ள தங்கம், 221.53 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, 1982 மற்றும் 1985ஆம் ஆண்டு கருவூலம் திறக்கப்பட்டது. ஆனால், ஆபரணங்கள் எண்ணிப்படவில்லை.
Similar News
News November 22, 2025
ஷூட்டிங்கில் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு எலும்பு முறிவு

ஈத்தா பட ஷூட்டிங்கின்போது, பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நாஷிக்கில் நடைபெற்றுவந்த ஷூட்டிங்கின்போது அவருக்கும் காயம் ஏற்பட்டதை அடுத்து, ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காயம் குணமடைந்த பிறகே மீண்டும் ஷூட்டிங்கை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.
News November 22, 2025
இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள்: எந்த ஹீரோயினுக்கு தெரியுமா?

இந்த தலைமுறை ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம். நட்சத்திர நடிகையாக இருந்தாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களே ரிலீஸ் ஆகும். அப்படியிருக்க இந்த ஆண்டில் 7-வது படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். டிராகன், பைசன், தி பெட் டிடெக்டிவ், ஜானகி, கிஷ்கிந்தாபுரி, பரதா என 6 படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளிவந்துள்ள நிலையில், 7-வது படமான ‘லாக் டவுன்’ டிச.5-ல் வெளியாகிறது.
News November 22, 2025
இந்துக்கள் இல்லையென்றால் உலகம் இல்லை: RSS தலைவர்

இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும் என RSS தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உலகில் தோன்றிய கிரீஸ், எகிப்து, ரோமன் என எல்லா நாகரீகங்களும் அழிந்துவிட்டன எனவும், ஆனால் பாரதம் என்பது அழிவே இல்லாத நாகரீகம் என அவர் கூறியுள்ளார். மேலும், எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும் இந்தியா ஒற்றுமையாக, உறுதியாக நின்றிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.


