News April 2, 2025

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்: செல்வப் பெருந்தகை

image

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என ஒருபோதும் காங். சொல்லாது என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 272 ஏக்கர் வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தவர் இந்திரா காந்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது, மீனவர்கள் தங்களுக்கு உரிமை வேண்டும் என சொல்வதால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதை ஆதரிக்கிறோம் என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

Similar News

News March 25, 2026

வீரப்பனின் மகள், மனைவி ஒரே தொகுதியில் போட்டியா?

image

வீரப்பனின் மனைவி, மகள் இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிட உள்ளதாக பேச்சு எழுந்தது. இது தொடர்பாக பேசிய வீரப்பனின் மகளும் நாதக வேட்பாளருமான திவ்யா, தனது தாய் அருகில் உள்ள வேறொரு தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியிலிருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தளி (அ) பென்னாகரம் தொகுதியில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

News March 25, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 25, 2026

கமல் செய்தது தியாகம் அல்ல, கடமை: திருமா

image

நெருக்கடியான சூழலில் ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது என திருமா பதிவிட்டுள்ளார். <<19467680>>தேர்தலில் போட்டியில்லை<<>> என கமல் அறிவித்தது காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் என்ற அவர், இது அவரது அறிவுமுதிர்ச்சியையும், பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது என்றார். மேலும், நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு கமல் இதை செய்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!