News April 2, 2025
கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்: செல்வப் பெருந்தகை

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என ஒருபோதும் காங். சொல்லாது என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 272 ஏக்கர் வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தவர் இந்திரா காந்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது, மீனவர்கள் தங்களுக்கு உரிமை வேண்டும் என சொல்வதால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதை ஆதரிக்கிறோம் என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
Similar News
News January 21, 2026
வீடுவீடாக போய் உள்ளாடை திருட்டு: இளைஞர் கைது

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில், பெண்களின் உள்ளாடைகளை குறிவைத்து திருடிவந்த 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். வீடுகளில் காயப்போடப்பட்டிருந்த உள்ளாடைகளை திருடுபோவதாக புகாரளிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் CCTV வைத்து ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், திருடுபோன உள்ளாடைகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
News January 21, 2026
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

*நட்பின் ஆழம் பழக்கத்தின் அளவைப் பொறுத்தது அல்ல. *விடியற்காலை இன்னும் இருட்டாக இருக்கும்போதும் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை. *முள் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அதை எடுக்க முடியும். *காதல் ஒரு முடிவற்ற மர்மம், ஏனெனில் அதை விளக்கக்கூடிய நியாயமான காரணம் எதுவும் இல்லை. *அளவுக்கு மீறிய ஆசைகளை கைவிடுவதே ஆகச்சிறந்த செல்வமாகும்.
News January 21, 2026
மே மாதம் கடலுக்குள் செல்லும் மத்ஸ்யா-6000

இந்தியா தனது சமுத்ரயான் ஆழ்ந்த கடல் ஆராய்ச்சி சமுத்திரயான் திட்டத்தின் ஒரு பகுதியாக, நீர்மூழ்கிக் கப்பலான ‘மத்ஸ்யா-6000’ மே மாதத்தில் முதல்முறையாக கடலுக்குள் பயணிக்க உள்ளது. டீப் ஓஷன் மிஷன் (DOM) கீழ் கட்டப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், முதலில் 500 மீட்டர் ஆழம் வரை செல்லும். இந்த சோதனை வெற்றி பெற்றால், பின்னர் 6,000 மீட்டர் ஆழத்திற்கான முழுமையான மனிதர் பயணம் மேற்கொள்ளப்படும்.


