News October 20, 2025
₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ இவரா?

இந்திய சினிமா இன்று பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடிகர்கள் கோடிகளில் சம்பளத்தை அள்ளுகின்றன. ஆனால் இந்தியாவில் முதன்முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த சிரஞ்சிவிதான், முதலில் ₹1கோடி வாங்கி அமிதாப், ரஜினி உள்ளிட்ட நடிகர்களை பின்னுக்கு தள்ளினார். ஆபத்பந்தவுடு(1992) என்ற படத்திற்காக, சிரஞ்சீவி ₹1.25 கோடி சம்பளம் வாங்கினார்.
Similar News
News October 20, 2025
பட்டாசு தீக்காயம் பட்டால் என்ன செய்ய வேண்டும்?

✦சிறிய அளவிலான தீக்காயத்திற்கு தண்ணீரில் 10- 15 நிமிடங்கள் குளிர வைக்கவும். ஐஸ் வாட்டரை பயன்படுத்த வேண்டாம் ✦தீக்காயம் மீது டூத் பேஸ்ட், எண்ணெய், நெய் வைக்கக் கூடாது ✦சுத்தமான காட்டன் துணியை பாதிக்கப்பட்ட பகுதி மீது கட்டவும் ✦கண்களில் எரிச்சல் & அலர்ஜி ஏற்பட்டால், சுத்தமான நீரில் கண்களை கழுவவும் ✦துணியில் நெருப்பு பிடித்தால், தரையில் படுத்து உருளுவதன் மூலம் நெருப்பு விரைவாக அணையும். SHARE IT.
News October 20, 2025
இந்தியாவுக்கு சோகமான தீபாவளி..

இந்த ஆண்டு தீபாவளி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகமான ஆண்டாக மாறிவிட்டது. ஆஸி., அணிக்கு எதிரான முதல் ODI-யில் இந்திய ஆடவர் அணி படுதோல்வி அடைந்தது. 7 மாதங்களுக்கு பிறகு, Ro- Ko-வின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் அவர்கள் சொதப்பியதால், கவலையில் ஆழ்ந்தனர். அதேபோல, WWC தொடரிலும் இந்திய பெண்கள் அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது மேலும் ரசிகர்களின் மனதை நொறுக்கியது.
News October 20, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று முன்தினம் 1 அவுன்ஸ்(28g) 44 USD குறைந்திருந்த நிலையில், இன்று(அக்.20) 63 USD உயர்ந்துள்ளது. இதனால், தற்போது, 4,262 டாலராக விற்பனையாகிறது. இந்திய மதிப்பில் 1 அவுன்ஸ் தங்கம் ₹5,538 அதிகரித்துள்ளது. ஒருவேளை பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கினால், முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் பக்கம் திரும்பும். இதனால், நம்மூரில் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.