News January 11, 2025

மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறதா?

image

மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உள்ளதாக எல்லா மதங்களுமே கூறுகின்றன. ஆனால், பகுத்தறிவாளர்கள் இதை மறுக்கின்றனர். இந்நிலையில், இந்த விஷயத்தை நம்பும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளன. இதில் முதலிடத்தில் வங்கதேசம் உள்ளது. அங்கு 98.8% பேர் இதனை நம்புகிறார்கள். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மொராக்கோ (96.2%), லிபியா (95.2%), துருக்கி (91.8%), ஈரான் (91.3%), பாக்., (89.3%) நாடுகள் உள்ளன.

Similar News

News December 8, 2025

லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான நியூஸ்

image

ரெப்போ ரேட்டை RBI குறைத்ததால், வங்கிகளும் <<18500891>>வட்டி விகித குறைப்பை<<>> அறிவித்து வருகின்றன. இதனால், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தாண்டு மட்டும் ரெப்போ ரேட் 1.25% குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் ₹50 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகள் தவணையில் பெற்றிருந்தால், ஆண்டுக்கு ₹9 லட்சம் வரை மிச்சமாகும். EMI குறைப்புக்கு உடனே வங்கியை அணுகுங்கள். SHARE IT.

News December 8, 2025

களத்திற்கு புறப்பட்ட விஜய்யின் பஸ் முதல் பாஸ் வரை (PHOTOS)

image

கரூர் சம்பவத்திற்கு பின் திறந்த வெளியில் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு புதுவையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக உப்பளம் மைதானத்தில் மும்முரமாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5,000 பேருக்கு பாஸ் வழங்கும் பணிகளில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே 72 நாள்களுக்கு பிறகு விஜய்யின் பிரசார பஸ் பனையூரிலிருந்து புதுச்சேரி நோக்கி புறப்பட்டுள்ளது. ஏற்பாடு குறித்த போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்க.

News December 8, 2025

டாக்டர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

image

அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை(சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர். SHARE.

error: Content is protected !!