News January 11, 2025
மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறதா?

மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உள்ளதாக எல்லா மதங்களுமே கூறுகின்றன. ஆனால், பகுத்தறிவாளர்கள் இதை மறுக்கின்றனர். இந்நிலையில், இந்த விஷயத்தை நம்பும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளன. இதில் முதலிடத்தில் வங்கதேசம் உள்ளது. அங்கு 98.8% பேர் இதனை நம்புகிறார்கள். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மொராக்கோ (96.2%), லிபியா (95.2%), துருக்கி (91.8%), ஈரான் (91.3%), பாக்., (89.3%) நாடுகள் உள்ளன.
Similar News
News November 13, 2025
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு VDK இருந்தால்.. ரஷ்மிகா

விஜய் தேவரகொண்டா (VDK) – ரஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. இதனிடையே, நேற்று நடைபெற்ற ‘The Girlfriend’ பட விழாவில், ரஷ்மிகாவின் கையில் VDK முத்தமிட்டதும், இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்தனர். மேலும் அதே விழாவில் பேசிய ரஷ்மிகா, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருந்தால், அது ஒரு ஆசிர்வாதம் என்றும் கூறியுள்ளார்.
News November 13, 2025
விஜய்யை நாங்கள் கூட்டணிக்கு அழைக்கவில்லை: நயினார்

திமுக, பாஜக உடன் <<18272355>>கூட்டணி இல்லை<<>> என்று சமீபத்தில் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிரந்தர நண்பரும், எதிரியும் இல்லை என்று கூறிய அவர், ஒரு கவுன்சிலர் கூட இல்லாத TVK, இப்படிப்பட்ட பெரிய வார்த்தைகளை பேச வேண்டுமா என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
BREAKING: விடுமுறை… நாளை முதல் 3 நாள்கள் அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை முதல் (நவ.14) 3 நாள்களுக்கு 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ் இயக்கப்படும். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT


